1. ஜாதகத்தில் கேது திசை, புதன் புத்தி நடந்தால் என்ன பலன்?
🌟 புதன் வலிமையுடன் இருந்தால் தாய்மாமன் உறவு வழியில் ஆதரவு கிடைக்கும்.
🌟 புத்திக்கூர்மை மேம்படும்.
🌟 வாகனச்சேர்க்கை உண்டாகும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
2. விருச்சக ராசியில் குரு தனித்து இருந்தால் என்ன பலன்?
🌟 நிதானமான செயல்பாடுகளை உடையவர்கள்.
🌟 கொடுக்கல் - வாங்கலில் நேர்மையானவர்கள்.
🌟 வாக்குவன்மை உடையவர்கள்.
🌟 உயர்ந்த கல்வியை கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
3. 10-ல் சனி மற்றும் சூரியன் இருந்தால் என்ன பலன்?
🌟 உயர் அதிகாரிகளிடம் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
🌟 தொழிலில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.
🌟 எதிலும் காலதாமதமான பலன்கள் கிடைக்கும்.
🌟 இரும்பு தொடர்பான பணிகள் மூலம் முன்னேற்றமான சூழல் அமையும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
4. லக்னத்தில் செவ்வாய், சூரியன் இருந்தால் என்ன பலன்?
🌟 ஜாதகர் உஷ்ணமான தேகத்தை கொண்டவர்கள்.
🌟 உயர் பதவிகளை வகிப்பவர்கள்.
🌟 முன்கோபம் உடையவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
5. ஆவணி மாதம் தனி குடித்தனம் போகலாமா?
🌟 ஆவணி மாதம் தனி குடித்தனம் போகலாம்.
6. வீட்டில் மாலை நேரத்தில் விளக்கு ஏற்றி குலதெய்வ வழிபாடு செய்யும் போது மணி அடித்து, தீபம் காட்டி வழிபடலாமா?
🌟 வீட்டில் மாலை நேரத்தில் விளக்கு ஏற்றி குலதெய்வ வழிபாடு செய்யும் போது மணி அடித்து தீபம் காட்டி வழிபடலாம்.
🌟 மணியின் ஒலிக்கு எதிர்மறை எண்ணங்களை களையும் சக்தி உண்டு.
7. குரு 10-ல் இருந்தால் சுயதொழில் செய்யலாமா?
🌟 10-க்கு உடைய அதிபதி நல்ல நிலையில் இருந்து, குரு 10-ல் இருந்தால் சுயதொழில் செய்யலாம்.