1. அஷ்டமி அன்று திருமணம் செய்யலாமா?
🌟 அஷ்டமி திதியில் சுப காரியங்களை செய்யக்கூடாது.
🌟 தானியங்களை பயிரிடலாம், ஆபரணங்கள் செய்யலாம்.
🌟 பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரும் காரியங்களை செய்யலாம்.
🌟 வாஸ்து மற்றும் சிற்ப வேலைகளை மேற்கொள்ளலாம்.
2. கரிநாள் என்றால் என்ன?
🌟 ஒருநாள் முழுமையாக தன் சுப தன்மையை இழக்கும் நாளே கரிநாள் எனப்படும்.
🌟 கரிநாள் சுப நிகழ்ச்சிக்கு ஏற்ற நாள் அல்ல.
🌟 கரிநாளில் செய்யும் சுப நிகழ்ச்சிகள் மத்தியமான பலனை தரும்.
3. 7ல் செவ்வாய் இருப்பதால் திருமணத்தடை ஏற்படுமா?
🌟 லக்னத்திற்கு 7ல் செவ்வாய் இருப்பதால் திருமணம் காலதாமதமாக நடைபெறும்.
🌟 ஆணிற்கு 7ல் செவ்வாய் இருந்தால், பெண் ஜாதகத்தில் 4, 12 இடங்களில் இருக்குமாறு இணைக்க வேண்டும்.
🌟 பெண்ணிற்கு 4, 12-ல் செவ்வாய் இருந்தால், ஆண் ஜாதகத்தில் 2, 7, 8 இடங்களில் இருக்குமாறு இணைக்க வேண்டும்.
🌟 செவ்வாய் ஆட்சி, உச்சம் மற்றும் நீசம் பெற்றால் தோஷம் இல்லை.
4. வீட்டில் எத்தனை முக குத்து விளக்கு ஏற்றலாம்?
🌟 வீட்டில் விளக்கு ஏற்றினால் லட்சுமியின் அருளைப் பெறலாம். நாம் ஏற்றும் தீபம் உள்ள விளக்கின் முகங்கள் அடிப்படையில்,
🌟 ஒரு முகம் - மத்தியமான பலனை கொடுக்கும்.
🌟 இரு முகம் - குடும்ப ஒற்றுமையை அதிகரிக்கும்.
🌟 மூன்று முகம் - புத்திரர்களின் துன்பம் குறைந்து இன்பம் பெருகும்.
🌟 நான்கு முகம் - வீடு, மனை மற்றும் கால்நடைகள் பெருகும்.
🌟 ஐந்து முகம் - ஐஸ்வர்யம் செழிக்கும்.
5. லக்னத்தில் கேது இருந்தால் பலன்கள் என்ன? பரிகாரம் என்ன?
🌟 லக்னத்தில் கேது இருந்தால், அவர் அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பார்.
🌟 சாதனையாளராகவும், எதிலும் வெற்றி பெறுபவராகவும் இருப்பார்.
🌟 பொருளாதார வசதி நிலையானதாக இருக்கும்.
பரிகாரம் :
கேதுவிற்கு அதிதேவதையான விநாயகரை அருகம்புல் மாலை போட்டு வணங்கி வர கேதுவினால் ஏற்படும் பிரச்சனைகளின் வீரியம் குறையும்.