🌟 எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும். அத்தனை சிறப்பு வாய்ந்த தமிழ் கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதங்களுள் ஒன்று சஷ்டி விரதம். இந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..
சஷ்டி விரதம் இருக்கும் முறை :
🌟 வளர்பிறை சஷ்டி திதியில் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. மாதந்தோறும் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி திதியன்று அதிகாலை 4.30 - 6.00 மணிக்குள் நீராடவேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள், பால், பழம் மட்டும் சாப்பிடலாம். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் ஒருவேளை உணவும், மற்ற நேரங்களில் பால், பழமும் சாப்பிடலாம்.
🌟 முருகனுக்குரிய மந்திரங்களான ஓம் சரவணபவ, ஓம் சரவணபவாயநம, ஓம் முருகா ஆகிய மந்திரங்களில் ஒன்றை நாள் முழுவதும் ஜெபித்து வர வேண்டும்.
🌟 திருப்புகழ், கந்தசஷ்டி கவசம், ஸ்கந்தகுரு கவசம், சண்முக கவசம் ஆகிய பாடல்களில் ஒன்றை காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்ய வேண்டும்.
🌟 மாலை, பக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யுங்கள். வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்கியம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும்.
🌟 மலைக்கோயில்களில் மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும்.
🌟 விரதமிருக்கும் போது மயில்வாகனனை நினைத்தே இருக்க வேண்டும். வேறு எந்த சிந்தனையிலும் மூழ்க கூடாது.
🌟 விரதம் இருந்ததன் பலன் கிடைக்க பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள்.
🌟 சஷ்டியில் விரதமிருந்து முருகனின் அருளை பெற வாழ்வில் அனைத்து செல்வ வளமும் வளர்ந்து கொண்டே போகும்.
இந்திராணி மங்கள் பாண்டே பிறந்த தினம் தினசரி ராசிபலன் (30.03.2022) மாங்கல்யம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மீன ராசியில் குரு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! ஒருவர் இறந்த பின்பு ஆண்டு திதி எப்போது கொடுக்க வேண்டும்? rasipalan 25.01.2020 in pdf format paanaasuran பிப்ரவரி 28 தேசிய மாசு கட்டுப்பாடு தினம் மார்ச் 03 புத்துணர்ச்சி பிறக்கும் வார ராசிபலன்கள் (03.06.2019 - 09.06.2019) PDF வடிவில் !! 17.06.2021 Rasipalan in PDF Format!! பொங்கல் பானையை கையில் வைத்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பூசம் ஆவணி மாதம் வளைகாப்பு செய்யலாமா? அடுப்புக்கு மேல் பணம் கொடுப்பதும் முன்னோரை ஆராதிப்பதற்கு ஏற்ற மகாளய அமாவாசை! கொய்யா பழங்களை தேடித் தேடி பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?