No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - விதேய நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட சீவகனும் அவனது நண்பர்களும்..!!

Apr 05, 2023   Ramya   148    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... விதேய நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட சீவகனும் அவனது நண்பர்களும்..!!

🌟 சீவகன், குணமாலையின் அருகில் செல்ல.. செல்ல.. அவள் பின்னோக்கி சென்று கொண்டேயிருந்தாள். ஒரு நிலைக்கு மேல் அவளால் பின்னோக்கி செல்ல முடியவில்லை... காரணம் வீட்டின் சுவர் தான்.

🌟 உடனே அவள் அருகில் சென்ற சீவகன், அவள் எங்கும் சென்று விடாத வகையில் தனது இரு கரங்களால் அணை போட்டு தடுத்து நிறுத்தினான்.

🌟 பின் சீவகன் குணமாலையை பார்த்து, நான் இவ்வளவு துன்பங்களை அனுபவிக்க காரணம் நீ தான் என்று கூறினாயே.. நான் எங்கு துன்பத்தை அனுபவித்தேன்! நீ வந்த நேரம் தான் என்னிடத்தில் இருந்த அனைத்து துன்பங்களும், கவலைகளும் நொடி பொழுதில் அகன்றன.


🌟 நான் இவ்வளவு சிறப்புகள் அடைந்திருக்கின்றேன் என்றால் அதற்கு முழு காரணமும் நீ தான். நீ வரவில்லை என்றால் கட்டியங்காரன் என்னை கைது செய்திருக்க மாட்டான். அவன் கைது செய்ய வந்ததினால் தான், நான் பல நாடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது.

🌟 அதுமட்டுமல்லாமல் என் பிறப்பின் ரகசியங்களையும் உன்னால் தான் தெரிந்து கொண்டேன். இத்தனை நாட்களாக என்னை காண முடியாமல் தவித்து கொண்டிருந்த எனது தாயின் கவலையும் உன்னால் தானே விலகியது.

🌟 இவ்வளவு நன்மைகளை எனக்கு செய்துவிட்டு இப்பொழுது நீயே உன்னை துரதிர்ஷ்டசாலி என்று கூறி கொண்டு என்னைவிட்டு பிரிந்து செல்ல நினைக்கின்றாயே! ஒருவேளை நான் வந்த நேரம் தான் நீ இவ்வளவு துன்பங்களை அனுபவித்து இருக்கின்றாயோ? அதனால் தான் என்னை பிடிக்காமல் என்னைவிட்டு அகன்று செல்ல முயற்சிக்கின்றாயோ? என்று கேட்டான்.

🌟 திடீரென்று சீவகன் இவ்விதம் கேட்டதும் பதறிப்போன குணமாலை, நீங்கள் இன்றி நானேது.. நான் உங்களை விட்டு எப்பொழுதும் அகன்று செல்ல மாட்டேன் என்று கூறி அவனை அணைத்து கொண்டாள்.

🌟 மறுநாள் காலையில் சீவகன் தன்னை ஒரு வணிகன் போல உருமாற்றி கொண்டு வீட்டிலிருந்து கிளம்புவதற்கு தயாராக இருந்தான். அப்பொழுது குணமாலை சீவகன் மீண்டும் தன்னை விட்டு பிரிந்து செல்வதை எண்ணி வருத்தம் கொண்டு கண்ணீருடன் நின்று கொண்டிருந்தாள்.

🌟 இப்பொழுது ஏன் அழுது கொண்டிருக்கிறாய்? எதற்கும் கவலைப்பட வேண்டாம்! கடந்த முறை நான் சென்ற பொழுது எங்கே இருக்கின்றேன்? என்று யாரும் அறியாமல் இருந்தீர்கள். ஆனால் இன்றோ நான் எங்கே செல்கின்றேன்? என்பதை கூட கூறிவிட்டு தானே செல்கிறேன்.

🌟 இன்னும் சிறிது நாட்கள் மட்டுமே என்னை விட்டு நீங்கள் அனைவரும் தனித்திருக்க போகின்றீர்கள். அதனால் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று அவளை மனம் தேற்றிவிட்டு, காந்தருவதத்தையிடம் கவனமாக இருங்கள் நான் விரைவில் வந்து விடுகிறேன் என்று கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து மகிழ்ச்சியுடன் தன்னுடைய குதிரையை இயக்கி கிளம்பினான்.


🌟 ராசமாபுரத்திலிருந்து தனது நண்பர்களுடன் புறப்பட்ட சீவகன், தனக்காக அமரிகை ஆற்றங்கரையில் காத்திருந்த படைகளுடன் இணைந்தான்.

🌟 இங்கு நீண்ட தூர பயணத்தினால் களைத்து வந்த சீவகனும், அவனுடைய நண்பர்களும் உண்பதற்கான உணவுகள் அனைத்தும் தயாராக இருந்தன. அந்த உணவில் இருந்து வெளிப்பட்ட மனமானது அங்கிருந்த படைவீரர்களின் பசியை மென்மேலும் தூண்டிட, உணவுக்காக அனைவரும் காத்திருந்தனர்.

🌟 சீவகனோ அங்கிருந்தவர்கள் அனைவரிடத்திலும் இருந்து மாறுபட்டு, எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். ஆனால் அவனுடைய மனமானது அடுத்து என்ன செய்ய வேண்டும்? இப்பொழுது நேரத்தினை வீண் செய்து கொண்டிருக்கின்றோமே என்று எரிமலையில் இருந்து வெளிப்படும் நெருப்பு குழம்பு போல கொந்தளித்து கொண்டிருந்தது.

🌟 அப்பொழுது புத்திசேனன் அவன் அருகில் சென்று, நாம் நாடுகளின் வழியாக பயணம் மேற்கொள்வது எளிமையாக இருந்தாலும், அது இன்னலாக மாறிவிடலாம். ஏனென்றால் எல்லா நாடுகளும் நட்பு நாடுகளாக இருப்பதில்லை. ஒரு சில நாடுகளை கடந்தால் மட்டுமே, நாம் விதேய நாட்டை அடைய முடியும்.

🌟 அதுமட்டுமல்லாமல் ஒரு படை சென்று கொண்டிருக்கின்றது என யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் நாம் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கின்றது. இருப்பினும் இப்பொழுது இருக்கக்கூடிய அவசரத்திற்கு என்ன செய்வது? என்றே தெரியவில்லை என்றான்.


Share this valuable content with your friends


Tags

கேதுவும் இணைந்திருந்தால் என்ன பலன்? 12ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? ராக்கி சிம்ம ராசிக்காரர்களுக்கு எந்த திசையில் வீட்டினுடைய வாசல் இருக்க வேண்டும்? rooga shani.! வீட்டை விற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தீபவளியன்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்! முதன்முதலில் அஷ்டமி அன்று மொட்டை அடிக்கலாமா? thiruppavai pdf format நாகர் சிலையை கனவில் கண்டால் என்ன பலன்? panchapachi நந்தட்டன் பெருமாள் கோவிலில் தரிசனம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? daily horoscope 07.02.2020 in pdf format சிவபெருமானின் கோப கனலில் இருந்து குழந்தை வரல் ப வடிவ கட்டிட அமைப்பின் தீமைகள்...! waaka thoosam ஒரு பெண்ணுக்கு திருமணம் ஏன் தடைபடுகிறது? பூ வாங்கி கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? Horoscope for today