No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனிடம் சுரமஞ்சரியை பற்றி கூறிய புத்திசேனன்..!!

Mar 31, 2023   Ramya   143    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகனிடம் சுரமஞ்சரியை பற்றி கூறிய புத்திசேனன்..!!

🌟 எனக்கு இதில் எவ்விதமான பிரச்சனைகளும் இல்லை. தந்தை ஒரு திருமணத்தை செய்து வைக்கின்றார் என்றால், அந்த ஆண்மகன் குருடனாக இருந்தாலும் சரி, உடல் ஊனம் கொண்டவனாக இருந்தாலும் சரி அவனை திருமணம் செய்து கொள்வது தானே பெண்களின் கடமையாக இருக்கின்றது.

🌟 பெண்ணை பெற்றவர்கள் உன்னை பார்த்ததும் நீ ஒரு பெரிய வீரன் என்றும், திறமைசாலி என்றும், செல்வங்கள் நிறைந்தவன் என்றும் தானே உனக்கு பெண்ணை கொடுக்கின்றார்கள். சிலர் வேறு வழியில்லாமல் உனக்கு திருமணம் செய்து கொடுக்கின்றார்கள். அதாவது இப்பொழுது விமலையுடன் திருமணம் நடைபெற்றது அல்லவா! அதை போல என்றான் புத்திசேனன்.

🌟 உடனே சீவகன் பெண் பிள்ளையை பெற்றவர்கள், நான் திருமணம் வேண்டாம் என்று கூறுவதை கூட கேளாமல் எனக்கு திருமணம் செய்து கொடுக்கின்றார்கள். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? இதில் என் மீது என்ன தவறு இருக்கின்றது? என்று கேட்டான்.

🌟 உன் மீது எந்தவொரு தவறும் இல்லை. நீ உண்மையாகவே பெண்களை கவர்ந்தாயா? என தெரியவில்லையே என்று தான் கேட்டேன் என்றான் புத்திசேனன்.

🌟 சந்தேகம் ஒன்று வந்து விட்டால் அதை உடனே நிவர்த்தி செய்து விட வேண்டும். இல்லையென்றால் அதுவே நாளடைவில் மிக பெரிய நோயாக மாறிவிடும். அதுவும் நண்பர்களுக்குள் சந்தேகம் என்பது அறவே இருக்கக்கூடாது. ஆகவே உனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை எப்படி நிவர்த்தி செய்வது? என்பதை பற்றி நீயே கூறு. அதை நான் செய்கின்றேன் என்றான் சீவகன்.

🌟 சரி நீயே கேட்கின்றாய் என்பதனால் மட்டுமே நான் கூறுகிறேன். மற்றபடி எனக்கும், இதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று கூறிவிட்டு, உனக்கு சுரமஞ்சரியை நினைவில் இருக்கின்றதா? என்று கேட்டான் புத்திசேனன்.


🌟 அந்த பெண்ணும், குணமாலையும் நெருங்கிய தோழிகள் தானே! ஒரு சமயம் அவர்கள் இருவரும் இடித்த சுண்ணத்தில் எது சிறந்தது? என்று என்னிடம் வந்து கேட்டார்கள். அதற்கு கூட நான் பதில் கூறினேன் என்றான் சீவகன்.

🌟 நீ கூறியது பதில் மட்டும் தான். அதற்கு பின்பு நிகழ்ந்தது என்னவென்று உனக்கு தெரியுமா? என்று கேட்டான் புத்திசேனன்.

🌟 அப்படி என்ன நிகழ்ந்தது? என்று எனக்கு தெரியவில்லையே! எதுவாக இருந்தாலும் தெளிவாக கூறு என்றான் சீவகன்.

🌟 அதற்கு புத்திசேனன், போட்டியினுடைய முடிவு சுரமஞ்சரிக்கு சாதகமாக இல்லாததால், அவள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே அடைந்து விட்டாள். மேலும் அவள் திருமணம் செய்வதற்கு விருப்பம் கொள்ளாமலும், எந்தவொரு ஆடவர்களையும் பார்க்காமலும் தனக்கென ஒரு அறையில் தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

🌟 அதுமட்டுமல்லாமல் அவளிடம் இருக்கக்கூடிய செல்வத்தினால், அந்த தெருவில் எந்தவொரு ஆண் மகனும் போவதற்கு அனுமதி இல்லாதவாறு செய்து விட்டாள் என்றான்.


Share this valuable content with your friends