No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி... சீவகனிடம் குணமாலையை பற்றி கூறிய நந்தட்டன்..!!

Mar 23, 2023   Ramya   132    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகனிடம் குணமாலையை பற்றி கூறிய நந்தட்டன்..!!

🌟 அவன் வாளை எடுப்பதற்குள்ளாகவே சீவகன் அவன் கதையை முடித்திருப்பான் அல்லவா! முதலில் சீவகன் இறந்து விட்டானா? இல்லையா? என்பதை நாம் அனைவரும் தெளிவாக உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். எதிலும் அவசரப்படாமல் செயல்பட்டால் தான் என்ன நடந்தது? என்று நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்று கூறி முடித்தான்.

🌟 அதற்கு சீவகன், பரவாயில்லையே உங்கள் அனைவரையும் சமாதானப்படுத்தும் விதமாகவும், அதே சமயம் புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டு உங்கள் அனைவரையும் காப்பாற்றி இருக்கின்றானே! ம்ம்ம்... முன்பு இருந்ததை விட இப்பொழுது அவன் நன்றாக தேறி விட்டான் என்றான்.

🌟 அவன் கூறியதை கேட்ட நாங்களும் அவனுடைய கூற்றுக்களில் இருக்கக்கூடிய உண்மையை புரிந்து கொண்டோம். பின்பு ஒவ்வொருவரும் தனித்தனியாக பிரிந்து, உன்னை தேட ஆரம்பித்தோம். நான்கைந்து மாதங்கள் பல இடங்களுக்கும், பல ஊர்களுக்கும் சென்று உன்னை தேடினேன்.

🌟 ஆனால் உன்னை பற்றி எந்தவொரு செய்தியும் எனக்கு கிடைக்கவில்லை. ஒருவேளை அவர்கள் கூறியது உண்மையாக இருக்குமோ? என்று மனமும் எண்ண துவங்கியது. மேலும் உன் மீது இருந்த நம்பிக்கையும் படிப்படியாக குறைய துவங்கியது.

🌟 என்ன செய்வது? என்று புரியாமல் வீட்டிற்கே சென்றேன். அங்கே அண்ணி குணமாலை மிகவும் மெலிந்து, உன்னை பற்றிய கவலைகளோடு அழுது கொண்டே இருந்தார். அவரை அந்த நிலையில் என்னால் பார்க்க இயலவில்லை.


🌟 அவர் என்னை பார்த்ததும் அவரை பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா? என்று தான் முதலில் கேட்டார். நானும் என்ன சொல்வது? என்று தயங்கி கொண்டிருப்பதை புரிந்து கொண்டு, அவரை பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் இங்கே வர வேண்டாம். என்னையும் பார்க்க வேண்டாம் என்று கோபமாக கூறி விட்டார்.

🌟 அதற்கு நான் மனதளவில், என்னால் என்ன செய்ய முடியும்? என்னால் முடிந்த அளவிலான பல முயற்சிகளையும் நான் செய்து கொண்டே தான் இருக்கிறேன் என்று எண்ணி கொண்டு அவர்களிடத்தில் எதுவும் பேசாமல் அமைதி காத்தேன் என்று கூறினான் நந்தட்டன்.

🌟 இதை கேட்டதும் சீவகன் கண்களில் இருந்து மீண்டும் அவனை அறியாமல் நீர்த்துளிகள் வெளிவந்தன. என்னுடைய பிரிவு குணமாலையை மிகவும் வேதனைப்படுத்தி இருக்கின்றது. குறுகிய நேரத்தில் கட்டிய மலைக்கோட்டை மணலாக மாறியது போல, எதிர்பார்ப்புடன் வந்தவளுக்கு எதிர்ப்புகள் நிறைந்த ஒரு வாழ்க்கையாகவே இருந்து விட்டது என்றான்.

🌟 பிறகு காந்தருவதத்தை அண்ணியின் வீட்டிற்கு சென்றேன். ஆனால் இங்கு கண்ட காட்சிக்கு அங்கு எதிர்மறையாக அனைத்தும் இருந்தது. அங்கு அவர் எந்தவிதமான கவலைகளையும் வெளிப்படுத்தாமல், சோகமும் இல்லாமல் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதை உணர்ந்தேன். என்னால் என்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த கோபத்தினால் அவர்களை பார்த்து இழிச்சொல்லும் பேசி விட்டேன் என்றான் நந்தட்டன்.

🌟 என்னது இழிச்சொல்லா? என்று சீவகன் அதிர்ச்சியாக கேட்க, அதற்கு நந்தட்டன், ஆமாம் அண்ணா! பல இடங்களுக்கு சென்றும் உங்களை பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்காமல் இருக்க, குணமாலை அண்ணியோ மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கின்ற பொழுது, காந்தருவதத்தை அண்ணி மட்டும் உங்களை பற்றிய எந்தவொரு கவலையும் இல்லாமல் இருந்தார். அதாவது, கணவர் இறந்து விட்டாரா? அல்லது உயிரோடு இருக்கின்றாரா? என்பதை கூட அறியாமல் மகிழ்ச்சியாக இருந்தார். அதை கண்கூட பார்த்ததும் என்னை அறியாமல் அவர்களிடத்தில் கோபப்பட்டு சில வார்த்தைகளை பேசிவிட்டேன். பின்பு அவர்கள் என்ன நடந்தது? என்று என்னிடம் கூறினார்கள். அதன் பிறகு சுய நினைவிற்கு வந்த நான், பேசியதற்காக மன்னிப்பும் கேட்டேன். அப்பொழுது அவர்கள் கோபம் கொள்ளாமல் என்னை உங்களிடத்தில் அனுப்பி வைத்திருக்கின்றார் என்று கூறினான்.


Share this valuable content with your friends


Tags

தேனீக்கள் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? உலக பென்குயின் தினம் blessing திருமணமான ஆண் சித்துக்கள் செய்யலாமா? சூரியனின்.. கிரகச் சேர்க்கை.. உங்களின் ஜாதகப்படி என்ன நடக்கும்? buy flower ஜுலை 30 பொங்கல் பானையை கையில் வைத்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன் - 09.11.2018 அபுல்கலாம் ஆசாத் 20.08.2018 rasipalan கிரகப்பிரவேசம் செய்யலாமா? கோவில் கோபுரத்தை கனவில் கண்டால் என்ன பலன் குருபகவான் திருப்பாைைவை குழந்தை இறப்பது ஹென்றி பெக்கெரல் கடகத்தில் சனி இருந்தால் என்ன பலன்? அதீத பிரபலத்தை கொடுக்கக்கூடிய வாஸ்து அமைப்புகள் !! மா மரத்தில் நிறைய மாங்காய் காய்த்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?