🌕 மாசி மாத பௌர்ணமியன்று சத்யநாராயண பூஜை செய்வதும் மற்றும் மாலை நேரத்தில் சூர்ய அஸ்தமனத்திற்கு பின்னர் அம்மன் கோயில்களில் வழிபாடு செய்வதும் அதிக நன்மைகளை தரும்.
🌕 மாசி பௌர்ணமியில் கிரிவலம் செல்வதால் அனைத்து துறைகளிலும் சிறப்பான பலன்களை பெற முடியும்.
🌕 பௌர்ணமி அன்று கோவில்களிலும், வீட்டிலும் விளக்கேற்றி வழிபடுவதால் நிறைய நற்பலன்களை அடைய முடியும். மாசி மாத பௌர்ணமியில் விரதமிருந்து வழிபட்டால் செல்வம் பெருகும்.
சத்யநாராயண பூஜை :
🌕 சத்யநாராயண பூஜையை ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று மாலை சந்திரன் உதயமாகும் நேரத்தில் செய்ய வேண்டும். ஒருவர் இந்த விரதத்தை முறையாக கடைபிடித்தால் அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுபடலாம். காக்கும் கடவுளான விஷ்ணு பகவானுக்கு நடத்தப்படும் பூஜையே சத்யநாராயண பூஜையாகும். பெருமாள் எடுத்த பலவிதமான அவதாரங்களில் சத்யநாராயணர் அவதாரமும் ஒன்று.
🌕 சத்யநாராயணருக்கு நடத்தப்படும் பூஜை மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இப்பூஜை திருமணம், முக்கிய திருவிழாக்கள், வீடு, நிலம் வாங்க என எந்த ஒரு நல்ல காரியத்தின் போதும் நடத்தப்படுகிறது. எந்த ஒரு காரியத்திலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று மனதில் பிரார்த்தித்துக் கொண்டு இந்த பூஜையை செய்ய வேண்டும். சத்யநாராயண பூஜையை நாம் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் செய்தால் மிகவும் நல்லது.
பூஜை செய்யும் முறை :
🌕 பௌர்ணமியன்று பூஜை செய்யும் முன் வீட்டில் கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும்.
🌕 கணவன், மனைவி இருவரும் பௌர்ணமியன்று சந்திரன் உதயமாகும் நேரத்தில் குளித்துவிட்டுப் பூஜை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
🌕 விநாயகர் பூஜை, நவகிரக பூஜை முதலியவற்றை செய்து அதன்பிறகு சத்ய நாராயண பூஜையை செய்ய வேண்டும்.
🌕 பின்பு தூபம், தீபம், நிவேதனம், கற்பூர தீபம் முதலியவற்றைக் காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
பலன்கள் :
🌕 சத்யநாராயணரை வழிபடுவதன் மூலம் கணவனை பிரிந்து வாழ்பவர்கள், கணவரின் அன்பை பெற்று இணைபிரியாமல் வாழும் அமைப்பு உண்டாகும்.
🌕 அதிகளவு கடன் வாங்கி அதை திருப்பிப் செலுத்த முடியாமல் உள்ளவர்கள் ஸ்ரீசத்யநாராயணரை வழிபடுவதன் மூலம் நன்மைகள் கிடைக்கும்.
🌕 புத்திர பாக்கியம், புகழ், செல்வம், அந்தஸ்து, அதிகாரம், பட்டம், பதவி, திருமணயோகம் போன்ற அனைத்தையும் சத்யநாராயண பூஜை தரவல்லது.
🌕 நாராயணனுக்கு பிடித்தமானது பால் பாயசமும், பாசிப்பயறு கஞ்சியும் ஆகும். இவற்றை படைத்து வழிபட்டால் நினைத்தது நடக்கும்.
🌕 இப்படி ஒவ்வொரு பௌர்ணமியன்றும் நம்பிக்கையுடன் பூஜை செய்தால் நல்ல பலன் கண்டிப்பாக கிடைக்கும். ஸ்ரீசத்யநாராயண பூஜையை செய்பவர்கள் பகவானின் அருளை பரிபூரணமாக பெறுவார்கள்.
20.12.2019 Rasipalan in pdf format!! வெள்ளெருக்கு பட்டை துளசி gayathiri manthiram building a house deebam கும்ப லக்னத்தில் சனி இருந்தால் என்ன பலன்? இன்றைய நாளில் பிறந்தவர்களின் வாழ்க்கை வரலாறு! ஜூலை - 10 என்னை நானே நெருப்பு வைத்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆனி மாதம் மொட்டை அடித்து 09.02.2021 Rasipalan in PDF Format!! january 08 history இந்த வார ராசிபலன்கள் (01.07.2019 - 07.07.2019) PDF வடிவில் !! காசநோய் தினம் பைரவர் கர்ப்பமான பெண்கள் என்னிடம் வந்து பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மர்லின் மன்றோ தினசரி ராசிபலன் (16.03.2022) 29.09.2020 Rasipalan in PDF Format!! angry