No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சித்திரம் வரைந்த சீவகன்..!!

Mar 04, 2023   Ramya   101    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சித்திரம் வரைந்த சீவகன்..!!

🌟 கிளியினுடைய பேச்சை கேட்டதும், குணமாலையின் மனதில் இருந்த அனைத்து கவலைகளும் நீங்கி, புன்னகைத்த வண்ணமாக அட உன் வாயில் இருந்தே வந்துவிட்டது. சீவகன் மணந்த காந்தருவதத்தை முதல் மனைவி என்று அப்படியானால்.. என்று சொல்லும் பொழுதே..

🌟 இனி யாராலும் உன்னை திருத்த முடியாது என்றது பேசும் கிளி.

🌟 நீயே இவ்வளவு கூறுவதால் சீவகனுடைய வீட்டிற்கு சென்று அவருடைய எண்ணம் என்னவென்று அறிந்து வந்து என்னிடம் சொல்ல முடியுமா? என்று பேசும் கிளியிடம் உதவி கேட்டாள் குணமாலை.

🌟 இது கூட சரியான யோசனையாக தான் இருக்கின்றது. முதலில் அவனுக்கு உன் மேல் விருப்பம் இருக்கின்றதா? என நான் அறிந்து வருகின்றேன்! அதுவரை உனது ஆசைகளையும், கற்பனைகளையும் கட்டுப்படுத்தி வைத்து கொள்வாயாக! என்று கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து கிளி பறந்து சென்றது.

🌟 கொஞ்சம் விட்டால் ரொம்பத்தான் பேசுகின்றாய் என்று அடிக்க வந்தவள், கிளி பறந்ததை பார்த்து விரைவாக என்னிடம் திரும்பி வந்து நற்செய்தி சொல்வாயாக என்றாள் குண்மாலை.

🌟 குணமாலையின் சோலையில் இருந்து பறந்து சென்ற கிளி வழியில் சென்ற பறவைகளிடம் வினவி, சீவகன் இருக்கும் இடத்தையும் அறிந்து கொண்டது.

🌟 அங்கு சீவகனுக்கு என்ன செய்வது? என்று தெரியாமல் தனித்திருந்த நொடிகள் யாவும் ஒரு யுகமாகவே தெரிந்தது. எனவே தன்னிகரில்லா காட்சியை தனித்துவமாக வரைய வெள்ளை சீலை மாட்டிய தட்டியை தேடி எடுத்து வந்தான்.


🌟 அந்த திரையில் மனதில் என்றும் நீங்காமல் அமையப்பெற்ற அந்த காட்சியை தத்ரூபமாக வரைய துவங்கினான்.

🌟 யானையினுடைய கோபமான கண்களும், யானையினால் அழிவை சந்தித்த சந்தையின் நிலைமைகளும் உண்மையில் எப்படி இருந்ததோ, அப்படியே இருப்பது போல வரைந்தான்.

🌟 யானையினுடைய துதிக்கையில் பல்லக்கின் கட்டைகள் சிக்கி கொள்ள, அந்த பல்லக்கின் திரை மறைவில் தவித்த குணமாலையின் தோற்றத்தையும் அவ்விதமே வரைந்தான்.

🌟 ஒரு நிமிடம் மட்டுமே அவளை கண்டிருந்தாலும், அவளை மறக்க இயலாத அளவில் அவளது உருவம் யாவும் சீவகனின் மனதில் ஆழ பதிந்தது. அது எவ்விதத்தில் என்றால்? சீவகன் வரைந்த படத்தில் அவள் அணிந்திருந்த ஆடைகளும், அணிகலன்களும் உண்மையாக அவள் அணிந்திருந்த விதத்திலேயே இருந்தன.

🌟 அப்பொழுது படம் எல்லாம் அழகாகத்தான் இருக்கின்றது என்று பின்னால் இருந்து ஒரு குரல் கேட்க, யார் அது? என்று சீவகனும் திரும்பி பார்த்தான். அது வேறு யாரும் இல்லை அவனுடைய மனைவியான காந்தருவதத்தையே.

🌟 சற்றும் எதிர்பார்க்காத காந்தருவதத்தையின் வருகை சீவகனின் முகத்தில் ஒரு சில பதற்றத்தை உருவாக்கினாலும் அதை வெளிக்காட்டாமல், காந்தருவதத்தையை வரவேற்று தான் வரைந்த படங்களை அவளிடத்தில் காட்டி கொண்டிருந்தான்.

🌟 சீவகன் வரைந்த படங்களை பார்த்த காந்தருவதத்தை, சந்தையில் இருந்து நீங்கள் வந்தது முதல் நீங்கள் நீங்களாகவே இல்லை. தனிமையில் அதிகம் இருக்கின்றீர்கள். ஒரு பெண்ணின் படத்தை இவ்வளவு அணு அணுவாக ரசித்து வரைந்து கொண்டிருக்கின்றீர்கள். இதில் என்ன ஆச்சரியம் என்றால்? ஒரு முறை பார்த்த அவளின் முகம் இன்னும் உங்கள் நினைவில் இருந்து அகலாமல் அப்படியே இருப்பது தான்.

🌟 அதுமட்டுமல்லாமல் அவள் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் ஒன்று விடாமல், காதில் இருந்த காதணியும், இடையில் இருந்த மேகலையும், கழுத்தில் இருந்த முத்துமாலையின் வடிவம் உட்பட அனைத்தும் உங்களுடைய நினைவில் இன்னமும் இருக்கின்றது என்று எண்ணும் பொழுது தான் எனக்கு மிகவும் வியப்பாக இருக்கின்றது என்றாள் காந்தருவதத்தை.

🌟 ஏதோ எரிந்து கொண்டு இருப்பது போல எமக்கு தெரிகின்றதே! என்ன காந்தருவதத்தை பொறாமை வெளிப்படுகின்றதோ? என்று புன்னகை செய்தான் சீவகன்.


🌟 அதற்கு காந்தருவதத்தையும், சந்தையில் இருந்து வந்தது முதல் நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தும் உங்களுடைய மனதில் இருந்து அகலவில்லை. அதிலும் அந்த பெண்ணின் முகம் சிறிதும் அகலவில்லை. இப்பொழுது நீங்கள் அவளுடைய தாளத்திற்கு ஆடி கொண்டிருக்கின்றீர்களோ? என்று கூறினாள்.

🌟 காந்தருவதத்தையின் இந்த கூற்று சீவகனுக்கு ஒருவிதமான குழப்பத்தையும், அவன் முகத்தில் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இருந்தாலும் அவற்றை வெளிக்காட்டி கொள்ளாமல் சூழ்நிலையை எப்பவும் போல சுலபமாக கையாண்டு, எனக்கு எதிலும் தொடர்பு இல்லை என்று உரையை முடித்தான்.


Share this valuable content with your friends


Tags

இறைச்சி சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 7ல் செவ்வாய் இருந்தால் மீன ராசி சாரதா தேவி 2023 Arttāṣṭama saṉi.! குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் இவர்களே ஏழில் கேது குழந்தையுடன் சர்ப்பத்தை கனவில் கண்டால் என்ன பலன்? என் தம்பிக்கு திருமணம் நிகழ்வது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்? nose பூ வாங்கி கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? நவீன இயற்பியலின் தந்தை பால் கொண்டு வரும் பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்? aipasi தயிர் சாதம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் daily rasipalan 02.03.2020 in pdf format 4ல் கேது இருந்தால் என்ன பலன்? ஒரே ராசி உள்ள சகோதரர்கள் ஒரே வீட்டில் இருக்கலாமா? அதிகாலையில் வளையலை உடைப்பது போல் கனவு கண்டால் நல்லதா? கெட்டதா? துலாம் ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!