அதிர்ஷ்டகரமாக உயிர் பிழைத்த சீதத்தன்.. நடந்தது என்ன?
🌟 அந்தத் தீவின் தலைவன் இவர்களை நல்முறையில் வரவேற்று அவர்களுக்கு தேவையான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தான். அவர்களுடைய தீவுகளில் இருக்கக்கூடிய உணவுகளைக் கொண்டு விருந்துகள் வைத்து உபசரித்தான்.
🌟 பயணம் மேற்கொண்டவர்கள் அதுவரை அவ்வளவு சுவை நிறைந்த உணவினை உண்டதில்லை என்பது போல உண்டு மனம் மகிழ்ந்தனர். உணவின் மூலம் வயிறு தானே நிறையும். மனம் நிறையுமா? அந்த நிறைவில்லா மனதினை நிரப்புவதற்கும் ஒரு வழியினை உருவாக்கித் தந்தான் அந்த தீவின் தலைவன்.
🌟 அந்த புதிய தீவில் மேனி அழகிலும், மனதினை கொள்ளை அடிக்கும் மங்கைகள் கொண்டும் மதிமயங்க வைக்கக்கூடிய மதுக்கள் மூலமாக ஆடலும், பாடலும் நிறைந்த உல்லாச நிகழ்வுகளும் ஏற்படுத்தப்பட்டன.
🌟 அதுமட்டுமல்லாது கதிரவன் மறைந்த குளிர்ச்சி நிறைந்த சந்திரன் உதித்த பொழுதில் மங்கையர்கள் பலர் சூழ, நீண்ட நெடும் பயணத்தால் உடல் உறுப்புகளுக்கு ஏற்பட்ட களைப்பு மறைந்து, சுறுசுறுப்பாக அவர்களுடைய உடல் அளவிலும், மன அளவிலும் கிளர்ச்சிகள் உருவாகின.
🌟 மங்கையும், மதுவும் இணைந்து மதியை மயக்கிட சில நாட்கள் எவ்விதம் கழிந்தது என்பதே நினைவில் இல்லாமல் சென்றது. பல இடங்களில் தோன்றினாலும், பல பயணங்களை மேற்கொண்டாலும், மாறுபட்ட பரிணாமங்களை உருவாக்கிக் கொண்டாலும், நீரின் பிறப்பிடம் மேகம் என்பது போல சீதத்தனுடன் பயணம் மேற்கொண்ட அனைவரும் இருப்பிடத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டிய சூழ்நிலையும் அவர்களுக்கு உருவாகியது.
🌟 இன்புற்று இருந்தவர்களுக்கு இந்த தீவினை விட்டு செல்வதற்கு மனமே இல்லை என்பது போல பிரியா விடை கொடுத்து விட்டு அந்த தீவினை விட்டு தங்களுடைய சொந்த நாட்டிற்கு செல்லும் பொழுது அந்த தீவில் கிடைக்கும் பொருட்களையும் மரக்கலத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.
🌟 விலைமதிப்பில்லாத விலை உயர்ந்த முத்துக்களையும், யானை தந்தங்களையும், அகில் சந்தனம் முதலிய பொருட்களை மரக்கலத்தில் ஏற்றிக்கொண்டு அந்த தீவில் இருக்கக்கூடிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துவிட்டு, தீவின் தலைவனுக்கு தனிப்பட்ட முறையில் சில பரிசுகளையும் அளித்துவிட்டு அவர்களிடமிருந்து விடைபெற்ற சீதத்தன் தன்னுடைய தாய்நாட்டை நோக்கி மரக்கலத்தை செலுத்த துவங்கினான்.
🌟 மரக்கலத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தனக்கான கனவுகளையும், கடந்தகால சுகங்களையும் எண்ணிக் கொண்டு நிகழ்காலத்தில் பயணத்தை மேற்கொண்டு இருந்தனர்.
🌟 மரக்கலத்தில் இருக்கக்கூடிய பொருட்கள் அனைத்தையும் விரைவில் தம்முடைய நாட்டிற்குக் கொண்டு சென்று, விற்று தன் ஊரில் இருக்கக்கூடிய அனைத்து வணிகர்களும் பொறாமை கொள்ளும் அளவில் நாம் வாழ வேண்டும் என்று கனவு கண்டு கொண்டு இருந்தான்.
🌟 அதுமட்டுமல்லாது தன்னுடைய வருகைக்காக காத்துக்கொண்டு இருக்கக்கூடிய தன்னுடைய பதுமையிடம் இந்த புதுமைகளை கொண்டு சென்று அவளிடத்தில் காட்டினால் அவள் அடையும் மகிழ்ச்சி எண்ணிலடங்காத வகையில் இருக்கும் என்று எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தான். பழங்கள் என்பது போதையைத் தரும். அந்த போதையை விட பல மடங்கு இன்பத்தை தர வல்ல தன்னுடைய மனைவியின் அரவணைப்பை எண்ணி அந்த சுகத்திற்காக காத்துக்கொண்டிருந்தான் சீதத்தன்.
🌟 தூக்கத்தில் இருக்கும் பொழுது கனவுகள் எவ்விதம் கலையுமோ அவ்விதத்தில் நிகழ்காலத்தில் கண்ட கனவுகளும் எதிர்பாராத சில சூழ்நிலைகளால் கலையத் துவங்கின. யாவரும் எதிர்பாராத ஒரு தருணத்தில் வானத்து நட்சத்திரங்கள் யாவும் மின்னிக்கொண்டிருந்தன.
🌟 நிலவானது தன்னுடைய ஒளியை வீசி கடலைக் குளிர்ச்சிப் படுத்திக் கொண்டிருந்தது. நிலவின் குளிர்ச்சியினால் கடல் அலைகளும் எப்பொழுதும் போல எழும்பி ஓலம் இட்டுக்கொண்டிருந்தன.
🌟 கடலின் அமைதியானது சிறு நொடிகளிலேயே மாறத் துவங்கியது. மேகமானது காற்றினால் புகுந்து கடலில் ஈர்ப்பை ஏற்படுத்த, அதன் விளைவாக அலைகள் எழும்பும் உயரமும் அதிகரித்தது. காற்றும், மேகமும் இணைந்து கொண்டு எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் பெரும் மழையை உருவாக்கிட கட்டுப்பாடுகள் பல நிறைந்த மரக்கலமானது கட்டுப்பாட்டை இழந்து காற்றின் திசைக்கு ஏற்ப செயல்பட துவங்கியது.
🌟 கலத்தில் இருந்த அனைவருக்கும் மனதில் அச்சம் உருவாகத் துவங்கியது. கலத்தினை இயக்கிய தலைவனுக்கோ எந்தவிதமான அச்சம் இன்றி கலத்தில் இருப்போரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு காற்றின் திசைக்கு எதிர் திசையில் பாய்மரத்தினை இறக்கி மரக்கலத்தின் கட்டுப்பாடுகளை மாற்றிக்கொண்டு இருந்தான்.
🌟 எதிர்பாராத விதமாக காற்றின் வேகத்தினால் மரக்கலத்தின் பாய்மர கொடியானது உடைய, கட்டுப்பாடுகள் அனைத்தும் தளரத் தொடங்கின. இனியும் மரக்கலத்தினை கட்டுப்படுத்த முடியாது என்பதை புரிந்து கொண்ட தலைவனோ! பயணம் செய்த அனைவரிடத்திலும் இனி இறைவன் தான் நம்மை காப்பாற்ற வேண்டும் என்பது போல முக பாவனைகள் மூலம் வெளிப்படுத்த, இறுதியில் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தன்னுடைய பயணத்தை நடுக்கடலிலேயே முடித்துக் கொண்டது மரக்கலம்.
🌟 மரக்கலத்தில் பயணம் செய்த அனைவரும் கண்ட கனவுகள் கனவாகவே மாறத் துவங்கின. கனவு கண்டவர்களும் கடலுக்குள் செல்லத் துவங்கினார்கள். கலத்தில் பயணம் செய்த அனைவரும் மூழ்கிட சீதத்தன் ஏதோ அதிர்ஷ்டகரமாக உயிர் பிழைத்தான்.
husband wife arakkan Today Rasipalan - 14.07.2018 தாய் இறந்தால் எத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்கு செல்ல வேண்டும்? அக்னி மூலையில் கழிவுநீர் தொட்டி வைக்கலாமா? dhanusu கடக ராசி கடன் பிரச்சனைக்கு பூஜையறை காரணமா? தந்தைக்கும் நகையை கனவில் கண்டால் என்ன பலன்? மீன லக்னத்தில் பிறந்தால் என்ன பலன்? SUMMANGALI தெத்துப்பல் கொண்ட திருவாய உடையவள் செப்டம்பர் 23 வெளவால் என்னுடைய கையை பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? theyipirai sashti கடவுளை காண முடியுமா? கைலாய நாதர் தேசிய வண்ணப் புத்தகங்கள் தினம் புரட்டாசி மாதம் குழந்தை பிறக்கலாமா?