🌙 சிவன் என்ற சொல்லுக்கு மங்களம், இன்பம் என்று பொருள். எனவே சிவராத்திரி ஒளிமயமான இரவு, இன்பம் தருகின்ற இரவு என்று அழைக்கப்படுகிறது.
🌙 சிவனுக்கு உகந்த இரவு என்று சொல்லக்கூடிய சிவராத்திரியை பற்றி அற்புதமான தகவல்கள் அதிகம் உள்ளன. சிவ சிவ என்று சொன்னால் போதும் துன்பங்கள் எல்லாம் திசை தெரியாமல் போகும்.
🌙 சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த தினமே சிவராத்திரி. நமசிவாய என்னும் மந்திரத்தை மனதில் நினைக்க எந்த தீமைகளும் நெருங்காது.
🌙 சிவனை அதிகாலையில் வணங்கினால் நோய்கள் தீரும். பகலில் வணங்கினால் விருப்பங்கள் நிறைவேறும். இரவில் வணங்கினால் மோட்சம் கிடைக்கும்.
🌙 சிவராத்திரி அன்று விரதம் இருந்து, கண் விழித்து சிவபூஜை செய்ய வேண்டும். தூய ஆடைகளை அணிந்து கொண்டு, திருநீறு பூசிக்கொண்டு சிவனை தியானம் செய்ய வேண்டும். சிவனுக்குரிய மந்திரங்களைக் கூறி வழிபட வேண்டும்.
🌙 சிவாலய வழிபாடு செய்யும் போது லிங்கத்திற்கு வலப்புறம் இருந்து பணிய வேண்டும்.
🌙 சிவராத்திரி தினத்தன்று, தியாகராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருக்கும் தலங்களில் தரிசனம் செய்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம்.
🌙 திருவைக்காவூர் ஈசனை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால், ஆயுள் பலம் அதிகரிக்கும்.
🌙 எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவ பூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.
🌙 ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் தரக்கூடியது.
🌙 சிவராத்திரி விரதம் இருந்ததால் விஷ்ணு சக்ராயுதத்துடன் லட்சுமியையும், பிரம்மா சரஸ்வதியையும் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
🌙 சிவனின் மூன்று கண்களாக சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் உள்ளனர்.
🌙 சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவ பூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.
🌙 சிவராத்திரி விரதமானது வயது, இன, மத வேறுபாடுகளைக் கடந்த யாவரும் அனுஷ்டிக்க கூடியது.
🌙 சிவராத்திரியில் விரதம் இருந்து வழிபட்டால் புத்திர தோஷம், திருமணத்தடை என அனைத்து துன்பங்களும் நீங்கும்.
பங்குனி மாதம் ஸ்ரீரங்கம் செல்வது நல்லதா? மஞ்சள் நிற மலர்கள். மார்கழி மாதத்தில் ஏன் திருமணம் செய்யக்கூடாது? 9-ல் உச்சம் பெற்றால் என்ன பலன்? perumaal weekly rasipalan (20.01.2020-26.01.2020) pdf format ராசியும் லக்னத்திற்கு எட்டில் சனி இருந்தால் என்ன பலன்? PALLI பிள்ளையார் கனவில் வந்தால் என்ன பலன்? கார்த்திகை மாதத்தில் நிலவுக்கால் வைக்கலாமா? . சுனாமி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பூராடம் நட்சத்திரம். தற்போது வாகனம் வாங்கலாமா? பெருமாளை கனவில் கண்டால் என்ன பலன்? பத்மினி நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? அறிமுகமில்லாத பெண் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பலன்கள் jothisd 24.08.2020 rasipalan in pdf format