No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சனிப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு ராசி..!

Dec 26, 2022   Dharani   327    சனிப்பெயர்ச்சி 2023-2025 

சனிப்பெயர்ச்சி பலன்கள்
2023-2025


2023ஆம் ஆண்டு தை மாதம் 3ஆம் நாளான ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும், 2023ஆம் ஆண்டு பங்குனி மாதம் 15ஆம் நாளான மார்ச் மாதம் 29ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படியும் சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.

சனியானவர் கும்ப ராசியான தனது ஆட்சி வீட்டில் நின்று தான் நின்ற நிலைக்கு ஏற்ப பல சுபச்செயல்களை இனி வருகின்ற இரண்டரை வருடங்கள் அளிக்க உள்ளார்.




சனி தான் நின்ற ராசியிலிருந்து,

மூன்றாம் பார்வையாக மேஷ ராசியான புத்திர ஸ்தானத்தையும்,

ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான பாக்கிய ஸ்தானத்தையும்,

பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான போக ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.


தர்மத்தை தலையாய கடமை என நினைத்து, சுயநலம் பார்க்காமல் செயல்படும் தனுசு ராசி அன்பர்களே...!!

தனுசு ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருந்துவந்த சனி பகவான் மூன்றாம் இடமான சகாய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைய இருக்கின்றார்.

பலன்கள் :

சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் எதிலும் பற்று இல்லாமல் செயல்படுவீர்கள். குழந்தைகள் வழியில் சுபச்செய்திகளும், மகிழ்ச்சியான சூழ்நிலைகளும், நன்மைகளும் ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் குறையும். வாகனம் மாற்றுவது தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும்.

சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதினால் அரசு தொடர்புகளின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். நீண்ட தூரப் பயணங்களால் நன்மை உண்டாகும். ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எண்ணிய முடிவுகள் காலதாமதமாகி கிடைக்கும். தந்தையிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான வர்த்தகத்தில் அரசு விதிகளுக்கு கட்டுப்பட்டு செயல்படவும்.

சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான போக ஸ்தானத்தை பார்ப்பதினால் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி நிம்மதி கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் எதிர்பார்த்த சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடிவடையும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும்.

சனி ராசிக்கு மூன்றாம் பாவகத்தில் அமர்ந்திருப்பதினால் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்களை வெற்றி கொள்வீர்கள். புதிய தொழில்நுட்ப கருவிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எதிரிகளை வெற்றி கொள்வதற்கான புதிய வியூகங்கள் கைகொடுக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் மற்றும் உறவினர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உங்களை பற்றிய சில வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கையும், மனப்பக்குவமும் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த சில திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள்.

பொருளாதாரம் :

தடைபட்ட தனவரவு கிடைக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். பொன், பொருட்களின் மீதான ஆர்வம் மேம்படும். கிடைப்பதில் பேராசை இன்றி செயல்படவும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் இன்னல்கள் குறையும். செலவுகளை குறைத்து சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும்.

உடல் ஆரோக்கியம் :

உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சிறு சிறு உபாதைகள் குறையும். காது, மூக்கு, தொண்டை பகுதியில் சில பிரச்சனைகள் ஏற்படும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மனதளவில் உற்சாகமான சிந்தனைகளும், சூழ்நிலைகளும் ஏற்படும். இதயம் மற்றும் செரிமான பிரச்சனைகள் குறையும்.

குடும்பம் மற்றும் பெண்களுக்கு :

உறவினர்களிடத்தில் செல்வாக்கு உயரும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளிடம் பக்குவமாக பேசி அவர்களை புரிய வைப்பது வெறுப்புகளை குறைக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு மேம்படும்.

பெண்கள் எதிலும் சுறுசுறுப்புடனும், கடினமான சூழ்நிலைகளில் தனித்தன்மையுடனும் செயல்படுவீர்கள். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்களை முன்னின்று செய்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். செல்வச்சேர்க்கை சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். எதிர்காலம் சார்ந்த தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். உங்களைப் பற்றிய பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள்.

மாணவர்களுக்கு :

மாணவர்கள் மேல்நிலை கல்வியில் கவனத்துடன் இருக்க வேண்டும். போட்டித் தேர்வுகளில் முன்னேற்றமான சூழ்நிலைகளும், வாய்ப்புகளும் உண்டாகும். கல்வி நிமிர்த்தமான ஆலோசனைகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். வளர்ப்பு பிராணிகளிடம் கவனத்துடன் இருக்க வேண்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான கல்வி சார்ந்த முயற்சிகளில் சிறு தடைகளும், அதற்கு பிறகு முன்னேற்றமும் உண்டாகும். ஆராய்ச்சி கல்வியில் கோப்புகளை கையாளுவதில் கவனம் வேண்டும். தொலைத்தொடர்பு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோக பணிகளில் எதிர்பாராத சில பொறுப்புகளின் மூலம் அலைச்சலும், தூக்கமின்மையும் உண்டாகும். சக ஊழியர்களின் கருத்துக்களை நம்பி முடிவுகளை எடுக்கும்போது உண்மை நிலைகளை அறிந்து செயல்படுவது நல்லது. பணி மாற்றம் செயல்களில் ஆலோசனைகளை பெற்று செயல்படவும். வேலைகளில் சோம்பலின்றி செயல்பட்டால் உயர்வு ஏற்படும். உயர் அதிகாரிகள் உங்களிடத்தில் ஏற்ற, இறக்கத்துடன் செயல்படுவார்கள். சிலருக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

வியாபாரிகளுக்கு :

தொழிலில் இருந்துவந்த போட்டிகள் குறையும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். விற்பனைகளை மேம்படுத்த வேண்டும் என்றால் முயற்சிகளை அதிகப்படுத்தவும். வேலையாட்களின் ஒத்துழைப்பில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தம் கைகூடும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கி உற்சாகமான சூழ்நிலைகள் உண்டாகும்.

கலைஞர்களுக்கு :

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சக கலைஞர்களின் ஆதரவு ஓரளவு கிடைக்கும். வித்தியாசமான கற்பனை திறன் மனதில் அதிகரிக்கும். சிறு வாய்ப்புகளையும் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ளவும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு :

சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்புமும், மரியாதையும் மேம்படும். கட்சி நிமிர்த்தமான பணிகளில் அலட்சியமின்றி செயல்படவும். ஆதரவாக இருந்தவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பார்த்த சில பொறுப்புகளில் மறைமுகமான விரயங்களுக்கு பின்பு எண்ணியவை ஈடேறும். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.

நன்மைகள் :

நடைபெற இருக்கின்ற சனிப்பெயர்ச்சியில் மனை நிமிர்த்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். மேலும் மூத்த உடன்பிறப்புகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். மனதை உறுத்திக்கொண்டு இருந்த கவலைகள் குறையும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும்.

கவனம் :

நடைபெற இருக்கின்ற சனிப்பெயர்ச்சியில் வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் தோன்றி மறையும். மேலும் நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்து கொள்வது நல்லது. சிந்தனைகளில் சோர்வும், செயல்பாடுகளில் ஒருவிதமான கட்டுப்பாடும் ஏற்படும். அரசு பணிகளில் நிதானத்துடன் செயல்படவும்.

வழிபாடு :

குலதெய்வத்தை வழிபடுவதன் மூலம் மனதில் நினைத்த காரியம் ஈடேறும்.

புதுக்கோட்டை, மலைக்கோயிலில் அமைந்துள்ள திருவருள் காளீஸ்வரர் மற்றும் சுப்பிரமணிய சுவாமியை வழிபட அதிகாரிகளின் ஒத்துழைப்புமும், மனதில் தெளிவும் ஏற்படும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுப்பலன்களே...!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.





Share this valuable content with your friends


Tags

சுயநல எண்ணம் மிகுந்தவர்கள் இவர்களே! rich man Today rasipalan - 24.08.2018 ஆண் குழந்தைகளை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்? சேவல் வாகனத்தில் அடிபட்டு இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஒற்றுமை பலப்படும் எம்பெருமான் ஆனந்த தாண்டவம் ஆடுதல் aani month வீட்டில் திருடு போனது போல் கனவு கண்டால் என்ன பலன்? தென்னை மட்டையில் சிறுவன் தூங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? speech krishnaa துலாம் ராசியில் சூரியன் . குரு திசை தானியங்கள் நன்றாக விளைந்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பழைய இடத்தை விற்று புதிய வீடு சுதஞ்சணன் கூறிய மந்திரம் எதிலும் எளிமை உடையவர்கள் இவர்கள் தான்! இன்றைய தின வரலாறு.! குட்டி பாம்பு இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?