🌟 இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின் படி (04.10.2018) வியாழக்கிழமையன்றும், திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 11.10.2018 வியாழக்கிழமையன்றும் நிகழ உள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சக ராசிக்கு இடம் பெயர்கிறார்.
🌟 நவகிரகங்களில் சுப கிரகமானவர் குருபகவான். குரு பார்க்க கோடி நன்மைகள் வந்து சேரும் என்பது பெரியோர்களின் வாக்கு.
🌟 குருபகவான் பொது சுபராக இருக்கும் பட்சத்தில் அவர் நின்ற வீட்டை காட்டிலும் அவர் பார்க்கும் வீட்டிற்கு அதிக சுப பலன்களை அளிக்கக்கூடியவர்.
🌟 ஒருவருடைய வளர்ச்சி, குழந்தைப்பாக்கியம், திருமணம் மற்றும் அறிவிற்கு குருவே அதிபதி. குரு பார்த்தால் அசுப கிரகங்கள் கூட சுபமாய் மாறி நன்மை பயக்கும். இப்படி பல சிறப்புகள் நிறைந்த குருபகவானை வழிபடுவதற்கு சில முறைகள் இருக்கின்றன.
🌟 அதன்படி அவரை சரியாக வழிபடுவோருக்கு பல நன்மைகள் நிச்சயம் வந்து சேரும். அதைப் பற்றி இங்கு காண்போம்.
🌟 குருபகவானுக்கு விளக்கேற்றி வழிபடுபவர்கள் வீட்டிலிருந்தே நெய் மற்றும் நல்லெண்ணெயை கொண்டு சென்று தனித்தனியாக விளக்கேற்றவும். இவை இரண்டையும் ஒன்றாக கலந்து தீபம் ஏற்றக்கூடாது.
🌟 குருபகவானுக்கு ஏற்றப்படும் விளக்குகளின் எண்ணிக்கை 11 அல்லது 21 ஆக இருப்பது சிறந்தது.
🌟 குருபகவானை மஞ்சள் நிற மலர்களை கொண்டு பூஜித்து, எலுமிச்சை சாதம் மற்றும் இனிப்பு வகைகளை பிரசாதமாக வழங்கினால் குருபகவானின் பரிப்பூரண அருள் கிடைக்கும்.
🌟 இயற்கை சுபரான குருபகவான் சுபராக இருக்கும் பட்சத்தில் அவர் நின்ற வீட்டின் காரகங்களையும், அவர் ஏற்ற ஆதியப்பத்திற்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை தரவல்லவர்.
குரு காயத்ரி மந்திரம் :
ஓம் வ்ருஷ பத்வஜாய வித்மஹே
க்ருணி அஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரசோதயாத்
🌟 இந்த மந்திரத்தை தினமும் குறைந்தது 36 முறை கூறி வந்தால் வாழ்வில் உள்ள இன்னல்கள் அனைத்தும் விலகி நன்மைகள் வந்து சேரும்.