🌟 இந்த பூமியில் வாழக்கூடிய மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் முதல் கடவுளாகவும், கண்கண்ட தெய்வமாகவும் திகழ்வது இந்த சூரிய பகவானே. சூரிய பகவான் இல்லையெனில் புல் பூண்டு முதல் மனிதன் வரை எந்த ஜீவராசிகளும் இங்கு இருக்க வாய்ப்பில்லை. சூரிய பகவானின் ஆற்றலை எவரொருவர் முழுமையாக அனுபவிக்கும்படியான கட்டிட அமைப்புகளை உருவாகி கொள்கிறாரோ அவர் தன்னுடைய வாழ்நாளில் எவ்வித துன்பமும், கஷ்டமும் இல்லாமல் வாழ முடியும்.
சூரிய வெளிச்சம் உள்ளே வர முடியாத கட்டிட அமைப்புகள் :
1. கிழக்கு முற்றிலும் மூடப்பட்ட கட்டிட அமைப்பு.
2. 10 அடிக்கு அதிகமான அளவில் போர்டிக்கோ அமைப்பு.
3. கிழக்கு பகுதியில் கீழே இறக்கப்படாத தாழ்வாரங்கள்.
4. நம்முடைய வீட்டிற்கு கிழக்கு பகுதியில் மிக உயரமான கட்டிடங்கள்.
5. நமது வீட்டிற்கும், கிழக்கு பகுதியில் உள்ள மற்றொரு வீட்டிற்கும் இடையில் மிகக் குறைவான இடைவெளியில் வீடு அமைத்துக் கொள்வது.
6. கிழக்கு பகுதியில் உயரமான மரங்கள் வளர்ப்பது.
7. கிழக்கு பகுதி முழுவதும் பூச்செடி போன்ற செடி, கொடிகளை படர விடுவது.
8. கிழக்கு பகுதியில் உயரமான மலை, குன்று போன்ற உயரமான அமைப்புகள் இருப்பது.
சூரியன் வீட்டிற்குள் வராத காரணங்களால் ஏற்படும் பிரச்சனைகள் :
🌟 தோல் பிரச்சனைகள்.
🌟 பருமன் அதிகரித்தல்
🌟 இரத்தசோகை
🌟 சர்க்கரை வியாதி
🌟 பசியின்மை
🌟 ஆஸ்துமா
🌟 கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள்
🌟 பொருளாதார பிரச்சனைகள்
🌟 கண் பார்வை
🌟 முடி உதிர்தல்
🌟 உடம்பில் வைட்டமின் டி3 பற்றாக்குறை
🌟 கால்சியம் பற்றாக்குறை
🌟 குறித்த வயதில் திருமணம் நடைபெறாமை
🌟 குழந்தை பிறப்பு தள்ளி போகுதல்
🌟 மலட்டுத்தன்மை
🌟 நிரந்தர வேலையில்லாமை
🌟 கலைத்துறைக்கு தன் வாழ்க்கையை அர்ப்பணித்தல்
🌟 மஞ்சள் காமாலை போன்றவைகள் ஏற்படக்கூடும்.
🌟 சூரிய பகவானை வீட்டிற்குள் அனுமதிக்கும்போது இதையும் தாண்டி பலப் பிரச்சனைகள் தீர வாய்ப்புண்டு. இதை தெரிந்தவர்கள் நீண்ட ஆயுள், நிறைய செல்வங்களுடன் வாழ்கிறார்கள்.