1. சுக்கிர திசை, சுக்கிர புத்தி நடந்தால் என்ன பலன்?
🌟 சுக்கிரன் பலமாக இருக்கும் பட்சத்தில் தன வரவுகள் மேம்படும்.
🌟 ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும்.
🌟 சுபகாரியங்கள் கைகூடும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
2. அமாவாசையில் தொழில் தொடங்கலாமா?
🌟 அமாவாசையில் தொழில் தொடங்குவதை தவிர்த்து மற்ற சுப தினங்களில் தொடங்கவும்.
3. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இறந்தால் அடைப்பு ஏற்படுமா?
🌟 உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இறந்தால் அடைப்பு ஏற்படும்.
4. பெண் பார்க்க எந்த ஓரையில் செல்லலாம்?
🌟 பெண் பார்க்க குரு மற்றும் சுக்கிரன் ஓரையில் செல்லலாம்.
5. சனி ஓரை வருகின்ற பொழுது சுபகாரியங்கள் மேற்கொள்ளலாமா?
🌟 சனி ஓரை வருகின்ற பொழுது சுபகாரியங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நன்மையாகும்.
6. இறந்தவர்களின் உடலை குளிகை நேரத்தில் வீட்டில் இருந்து எடுத்து செல்வது சரியா?
🌟 இறந்தவர்களின் உடலை குளிகை நேரத்தில் வீட்டில் இருந்து எடுத்து செல்வது சரியானதல்ல.
🌟 குளிகை காலத்தில் எதை செய்தாலும் அது தொடர்ந்து கொண்டே இருக்கும்.
7. 11ல் கேது இருந்தால் என்ன பலன்?
🌟 நண்பர்கள் அதிகம் உடையவர்கள்.
🌟 சகோதரர்களால் ஆதரவற்ற சூழ்நிலை உருவாகும்.
🌟 காது தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.
🌟 இவையாவும் பொதுபலன்களே ஆகும்.