🏠ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண்வாரிசு வேண்டும் என்ற ஏக்கத்தை மட்டும் எத்தனை வளர்ச்சி இருந்தாலும் அதை இன்னும் தகர்த்த முடியவில்லை. ஒரு வீட்டில் ஆண்வாரிசு இல்லாததற்கும், வாஸ்துவிற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என்பதை அறிவியல் பூர்வமாக பார்ப்போம்.
🏠அண்டமும், பிண்டமும் பஞ்சபூதங்களால் ஆனவை என்பது போல் நாம் வசிக்கும் இல்லமும் பஞ்சபூதங்களால் ஆட்சி செய்யப்படுகின்றன. அந்த வகையில், ஒரு வீட்டின் வடகிழக்கு மூலையை நீரும், தென்கிழக்கு மூலையை நெருப்பும், தென்மேற்கு மூலையை நிலமும், வடமேற்கு மூலையை காற்றும், பிரம்ம ஸ்தானத்தை ஆகாயமும் ஆட்சி செய்கின்றன.
🏠நம்மை சுமக்கின்ற நிலமாகிய பூமித்தாய் தென்மேற்கு மூலையை ஆள்வதன் அடிப்படையிலேயே ஒரு பெண் சுமக்கின்ற வாரிசு ஆணா, பெண்ணா என்பதும் அந்தப் பெண்ணின் வீட்டின் தென்மேற்கு மூலையை பொறுத்தே அமையும்.
🏠ஒரு வீட்டின் குடும்ப தலைவர், தலைவி இருவரும் தென்மேற்கு அறையில் உறங்க வேண்டும். தென்மேற்கு பகுதி மட்டுமே அவனுடைய சந்ததியை உருவாக்கும். அவனுக்கு பணம், புகழை கொடுக்கும். ஆகையால் தென்மேற்கு மூலையில் படிக்கட்டுகள், கழிவறை அல்லது சமையலறை என தவறான அமைப்பில் இருந்தால் அது தீய விளைவை கொடுக்கும்.
🏠மேலும் மனையின் வடக்கு மற்றும் கிழக்கு சுற்றுச் சுவர்களில் கட்டிடங்கள் அமைத்து ஈசானிய மூலை மூடப்பட்டால் உரிமையாளரின் உடல்நலம் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகும். வம்சவளர்ச்சி தடைபட்டு தீய விளைவுகளே ஏற்படும். மனையின் வடகிழக்கு மூலை குறைவுபட்டலோ, வீட்டு அமைப்பில் வடகிழக்கு குறைவுபட்டலோ ஆண்வாரிசு இல்லாமல் போகும்.
🏠எனவே, ஆண்வாரிசு வேண்டும் என்று ஆலயம் சுற்றுவோர் அனைவரும் வீட்டின் தென்மேற்கு பகுதியை நன்றாக ஆய்ந்து கவனியுங்கள். அதில் தேவையானவற்றை வைத்தும், தேவையில்லாதவைகளை நீக்கியும் உங்கள் வீட்டின் தென்மேற்கு மூலையை வாஸ்து பலம் மிகச் செய்தால் உங்களின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும் இயற்கையின் அருளால்!