⭐ நம்முடைய வாழ்வில் வரும் இன்ப, துன்பம் அனைத்தும் நவகிரகங்களின் செய்கையால் நடக்கிறது.
⭐ ஜோதிடப்படி கோள்கள் ஒன்பது ஆகும். அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என்பனவாகும். நவகிரகங்களை வழிபடுதல் மிகத் தொன்மையான வழிபாடாகும்.
⭐ பொதுவாக ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கும். ஒவ்வொரு கட்டங்களிலும் உள்ள கிரகங்களை வைத்து பலன் கூறுவார்கள்.
⭐ அப்படி ஜாதகக்கட்டத்தில் கிரகங்களின் சேர்க்கை இருந்தால் அவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
⭐ ஜாதகக்கட்டத்தில் நான்கு கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து இருந்தால் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?
⭐ அந்த வகையில், நாம் இன்று சூரியனுடன் மூன்று கிரகங்கள் ஒன்று சேர்ந்து இருந்தால் உண்டாகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
சூரியன் + சந்திரன் + புதன் + சனி :
சூரியனுடன் இந்த மூன்று கிரகங்கள் கூடி இருந்தால்,
💫 மற்றவர்களுக்கு கீழ் பணிபுரியக்கூடியவர்கள்.
💫 நிலையற்ற மனநிலையை கொண்டவராக இருப்பார்கள்.
சூரியன் + சந்திரன் + குரு + சுக்கிரன் :
சூரியனுடன் இந்த மூன்று கிரகங்கள் கூடி இருந்தால்,
💫 யோகம் கொண்டவர்கள்.
💫 பாசன வசதி உள்ள இடத்தில் வசிக்கக்கூடியவர்கள்.
சூரியன் + சந்திரன் + குரு + சனி :
சூரியனுடன் இந்த மூன்று கிரகங்கள் கூடி இருந்தால்,
💫 புத்திர பாக்கியம் உடையவர்கள்.
💫 விகாரமான விழிகளை கொண்டவர்கள்.
💫 விசுவாசமான வேலையாட்களை கொண்டவர்கள்.
சூரியன் + சந்திரன் + சுக்கிரன் + சனி :
சூரியனுடன் இந்த மூன்று கிரகங்கள் கூடி இருந்தால்,
💫 பயந்த சுபாவம் கொண்டவர்கள்.
💫 பொருட்களின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.
💫 சமவயதினர்களை அனுசரித்து செல்லக்கூடியவர்கள்.