No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விஜயதசமி ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா?

Oct 09, 2019   Ananthi   282    ஆன்மிகம் 

சரஸ்வதி பூஜை முடிந்த அடுத்த நாளை அனைவரும் விஜயதசமி நாளாக கொண்டாடுகிறோம். ஏன் விஜயதசமி கொண்டாடுகிறோம் என்று தெரியுமா? இதற்கு ஒரு புராணக் கதை உண்டு.

🌟 பிரம்மதேவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான் மகிஷன் என்னும் அசுரன். அவனது தவத்தைக் கண்டு மனம் இரங்கிய பிரம்மதேவர், அசுரனின் முன்பு தோன்றினார். அவரைக் கண்டதும் மகிஷன் மகிழ்ச்சியில் ஆழ்ந்தான். பின்னர் தனக்கு மரணமில்லாத வரத்தை தருமாறு பிரம்மதேவரிடம் கேட்டான். ஆனால், பிறந்த அனைவருக்கும் இறப்பு நிச்சயம். எனவே, வேறு வரம் கேட்கும்படி பிரம்மதேவர் கூறினார்.

🌟 இதையடுத்து, தனக்கு அழிவு என்று ஒன்று வந்தால், அது பெண்ணாலேயே வர வேண்டும் என்ற வரத்தை மகிஷன் கேட்டான். பிரம்மதேவரும் அவன் கேட்டபடியே வரம் அருளி மறைந்தார். மகிஷனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பெண்கள் மென்மையானவர்கள். அவர்களால் ஆபத்து வர வாய்ப்பில்லை என்று எண்ணினான் மகிஷன்.

🌟 தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என அனைவரையும் கொடுமைப்படுத்தினான். மகிஷனின் தொல்லையால், தேவர்கள் அனைவரும் துன்பத்தில் ஆழ்ந்தனர். துன்பம் எல்லை கடந்ததால் அவர்கள் அன்னை பராசக்தியிடம் சென்று முறையிட்டனர்.

🌟 தேவியும் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க போர் செய்ய முற்பட்டாள். மும்மூர்த்திகளும் தங்களது அம்சத்தை அன்னைக்கு கொடுத்தனர். அவற்றைப் பெற்றுக்கொண்ட அன்னை, மகிஷாசுரனை அழிப்பதற்காக புறப்பட்டுச் சென்றாள்.

🌟 அன்னை, 9 நாட்கள் போரிட்டு 10ம் நாளில் மகிஷாசுரனை அழித்தாள். கொடியவனான மகிஷாசுரன் அழிந்ததால் தேவர்கள் அனைவரும் மகிழ்ந்தார்கள். மகிஷனை வதம் செய்ததால் மகிஷாசுரமர்த்தினி என்று பெயர் பெற்றாள் அன்னை. அந்த வெற்றித்திருநாளையே விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம்.

🌟 அசுரனை வென்று அனைவருக்கும் நன்மையை அளித்த அன்னையை போற்றி வழிபட்டால் தீமைகள் ஏதும் நெருங்காது.




Share this valuable content with your friends


Tags

புகழ்த்துணை நாயனார்...! காளைக்கன்று போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருமண தினசரி ராசிபலன்கள் (29.07.2020) பச்சை நிற வளையல் அணிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? Riṣapa rāsi palaṉkaḷ.! 25.11.2019 rasipalan in pdf format சர்வதேச படுகொலை நினைவு தினம் bridge ஒருவர் ருத்ராட்சத்தை தானமாக தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? எனக்கு ஒரு பெண் நகை கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பூமி பூஜை போட சிறந்த நாள் எது? 21.05.2021 Rasipalan in PDF Format!! 30.08.2019 Rasipalan in pdf format!! பூச நட்சத்திரம் மகர ராசியில் சனி இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! ஐயப்பன் ஆபரணம் பூணுவது ஏன்? சனி உள்ளது. இது யோகமா? கரிநாளில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாமா? நெல்லிக்காய்