No Image
 Sun, Apr 05, 2026
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நம் முன்னோர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

Jun 22, 2018   Dharani   3962    கனவு பலன்கள் 

1. யானை மிதிப்பது போல கனவு கண்டால் என்ன பலன்?

👉 யானையை கனவில் காண்பது விநாயகரை கண்டதற்கு சமம். எனவே, காரியத் தடைகள் அனைத்தும் விலகும்.

👉 யானை மிதிப்பது என்பது நாம் இதுவரை அனுபவித்த துன்பங்கள் நீங்கி விநாயகரின் அருளால் புதிய வாழ்க்கை அமையப் போகிறது என்பதை குறிப்பதாகும்.

2. நம் முன்னோர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

👉 நம் முன்னோர்கள் நம்மை ஆசிர்வதிப்பதாக கனவு கண்டால் செல்வம் பெருகும்.

👉 இறந்தவர், நம்முடன் பேசுவதாக கனவு கண்டால் ஆயுள் விருத்தி ஏற்படும்.

👉 இறந்த முன்னோர்களிடம் நாம் பேசுவதாக கனவு கண்டால் பிணி ஏற்படுவதைக் குறிக்கும்.

3. துளசி செடி கனவில் வந்தால் என்ன பலன்?

👉 துளசி செடியை கனவில் கண்டால் தன விருத்தி உண்டாகும்.

👉 துளசி, மகாலட்சுமியின் அம்சமாக இருப்பதால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

👉 துளசி செடி கனவில் வந்தால் தொழில் விருத்திக்கான முயற்சிகள் கைகூடும்.

4. பூனை கடிப்பதாக கனவு கண்டால் என்ன பலன்?

👉 பூனையை கனவில் காண்பது நன்மையைத் தரும்.

👉 பூனை பயந்து ஓடினால் இதுவரை ஏற்பட்ட துன்பங்கள் மறையும்.

👉 பூனை இறந்து கிடப்பதாக கனவு கண்டால் காரிய சித்தி உண்டாகும்.

👉 பூனை கடிப்பதாக கனவு கண்டால் விரோதிகளால் பாதிக்கப்படுவதைக் குறிக்கும்.

5. இறந்தவர்கள் சாப்பாடு கேட்பது போல் கனவு கண்டால் நல்லதா?

👉 இறந்தவர்கள் சாப்பாடு கேட்பது போல் கனவு காண்பது குடும்பத்தில் எவ்வளவு முயற்சித்தும் மேன்மை இல்லாததைக் குறிக்கிறது.

👉 மேலும், இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யாமல் இருப்பதைக் குறிக்கிறது.

👉 எனவே, ஒவ்வொரு அமாவாசையும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குடும்பத்தில் மேன்மைகள் உண்டாகும்.


Share this valuable content with your friends