1. தங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 தங்கத்தை கனவில் கண்டால் நன்மைகள் உண்டாகும்.
🌟 பொருள் சேர்க்கை உண்டாகும்.
🌟 மேலும், புதிய தொழில் திட்டம் எண்ணியவாறே நிறைவேறும்.
2. குழந்தையை கனவில் கண்டால் நல்லதா? கெட்டதா?
🌟 குழந்தையை கனவில் காண்பது சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
3. மீன் தொட்டியை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 மீன்களை கனவில் கண்டால் இலாபம் அதிகரிக்கும்.
🌟 மீன்கள் நீந்துவதாக கனவு கண்டால் எண்ணிய காரியத்தில் காரிய சித்தி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
4. குலதெய்வத்தை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 குலதெய்வத்தை கனவில் காண்பது வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதைக் குறிக்கிறது.
🌟 புகழ் மற்றும் மதிப்புகள் உயரும்.
🌟 தொழில் வாய்ப்புகள் உண்டாகும்.
🌟 மேலும், சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.
5. பாம்பை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 பாம்பை கொல்வது போல் கனவு காண்பது இதுநாள் வரை தொழிலில் ஏற்பட்ட முடக்க நிலை நீங்கி மேன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
🌟 விரோதிகளால் உண்டான இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
🌟 அனைவரிடத்திலும் மதிப்புகள் உயரும்.
6. குரங்கு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 குரங்கு கடிப்பது போல் கனவு கண்டால் உடல் நலத்தில் பாதிப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
🌟 மன சஞ்சலத்தால் அவப்பெயர்கள் உண்டாகும்.
🌟 உறவினர்களால் சாதகமற்ற சூழ்நிலை உண்டாகும்.
🌟 எனவே, சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவது நன்மை பயக்கும்.