No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




உங்களுக்கு குருபலன் வந்துவிட்டதா?

Jul 05, 2018   Suganya   755    ஆன்மிகம் 

🌟குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

🌟இப்படி பெயர்ச்சி அடையும் போது அவர் பார்க்கும் ராசிகள் புனிதம் அடைந்து நன்மைகள் நடக்கும் என்பது ஜோதிட சாஸ்திரம்.

🌟குருபகவான், தான் நின்ற (ராசி) இடத்திலிருந்து 5வது ராசியையும், 9வது ராசியையும் பார்ப்பார். மற்றும் 7வது ராசியை நேர் பார்வையாக பார்ப்பார்.

🌟இது மட்டும் இல்லாமல், தான் நின்ற ராசிக்கு அடுத்த ராசியையும் அதாவது 2 வது வீடு, மற்றும் 11வது வீட்டையும் சூட்சுமப் பார்வையின் மூலம் பார்ப்பார்.

🌟குருபகவானின் பார்வையானது 5, 7, 9 மற்றும் 2, 11 என ஐந்து ராசிகளைப் பார்ப்பார்கள்.

🌟ஒருவர் ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் குருப்பார்வை பட்டால் அந்த தோஷம் நீங்கும் என்பது ஜோதிட விதி.

🌟அதாவது ஒருவருக்கு திருமணத்தில் தடை இருப்பதாக இருந்தால், குருப்பார்வை படும்போது தடை நீங்கி திருமணம் கைகூடும் என ஜோதிடம் உறுதியாகக் கூறுகிறது.

🌟விதியை மாற்றும் வல்லமை, குருபகவானுக்கு மட்டுமே உள்ளது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

🌟எனவேதான், திருமணத்தில் குரு பலன் வந்துவிட்டதா? என அறிந்த பின் திருமண முயற்சிகளில் அனுபவசாலிகள் ஈடுபடுவார்கள்.

🌟ஜாதகப் பொருத்தம் பார்க்கப்படாமல் அதாவது காதல் திருமணம் செய்பவர்கள், இந்த ஜாதகப் பொருத்தமெல்லாம் பார்க்காமல் திருமணம் செய்வார்கள். இன்னும் சிலர் சூழ்நிலை காரணமாக பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள்.

🌟திருமண முகூர்த்தத்தை குறிக்கும்போது, ஆண் அல்லது பெண் இருவரில் ஒருவருக்காவது குருப்பார்வை இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

🌟முகூர்த்த லக்னம் மற்றும் எட்டாமிடம் குரு பார்வையில் இருக்கும்படி அமைத்துக்கொள்ள உங்கள் ஜாதகப்படி திருமண தோஷம் எதுவானாலும் எந்தக் குறையும் இல்லாதபடி மண வாழ்வு சிறப்பாகும்.


Share this valuable content with your friends