No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கோவில்களை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்?

May 13, 2019   Ananthi   574    கனவு பலன்கள் 

1. எனக்கும், என் காதலருக்கும் திருமணம் நடந்தது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

2. மீனாட்சி அம்மன் தத்ரூபமாக வந்து தீபாராதனை கொடுப்பது போலவும், அதனை தொட்டு கும்பிட்டு சந்தனம் மற்றும் குங்குமம் எடுத்து என் நெற்றியில் வைத்து கொண்டது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த எண்ணம் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

3. கோவில்களை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கோவில்களை அடிக்கடி கனவில் கண்டால் பகைவரை வெல்லக்கூடிய ஆதரவான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. மாமன் பையன் கனவில் வந்தால் என்ன பலன்?

🌟 மாமன் பையன் கனவில் வந்தால் எதிர்பாராத நிகழ்வுகளால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. எனக்கு அறுவை சிகிக்சை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. கோவிலில் அர்ச்சனை செய்யும்போது மூன்று தேங்காய் அழுகி போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நினைத்த காரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends