கிணறு தோண்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
Feb 05, 2019 Ananthi 4467 கனவு பலன்கள்
1. கோவில் கோபுரம் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 கோவில் கோபுரம் விழுவது போல் கனவு கண்டால் செய்கின்ற புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
2. இறந்தவர்கள் மீண்டும் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்து வந்த கவலைகள் மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு கூடிய விரைவில் தீர்வு கிடைக்கும்.
🌟 முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதன் மூலம் இன்னல்கள் குறைந்து சுபிட்சம் உண்டாகும்.
3. கிணறு தோண்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 கிணறு தோண்டுவது போல் கனவு கண்டால் மனதில் தோன்றிய எண்ணங்களை பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து சிறந்த முடிவுகளை எடுக்க வேண்டும்.
4. நெருங்கிய நண்பர் வீட்டிற்கு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 நெருங்கிய நண்பர் வீட்டிற்கு வருவது போல் கனவு கண்டால் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் சற்று நிதானமாக செயல்பட வேண்டும்.
5. மாந்திரீகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 மாந்திரீகம் செய்வது போல் கனவு கண்டால் செய்யும் செயல்களில் மற்றவர்கள் மனம் பாதிக்காத வண்ணம் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
🌟 குலதெய்வ வழிபாடு செய்து வர இன்னல்கள் குறைந்து சுபிட்சம் உண்டாகும்.
6. பாம்பாட்டியுடன் பாம்பு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மற்றவர்களின் கருத்துக்களை ஏற்று நடைமுறைப்படுத்தும்போது சற்று சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
7. கல்யாண விருந்துகளில் கலந்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 கல்யாண விருந்துகளில் கலந்து கொள்வது போல் கனவு கண்டால் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.