No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சாமி சிலையின் மேல் மல்லிகைப் பூவை வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jan 29, 2019   Ananthi   1082    கனவு பலன்கள் 

1. சாமி சிலையின் மேல் மல்லிகைப் பூவை வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த காரியம் கூடிய விரைவில் நடைபெறும் என்பதைக் குறிக்கின்றது.

2. எனது தாலி கயிற்றில் இருந்து மாங்கல்யம் தனியே கையில் உள்ளது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தம்பதிகளுக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைவதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. எனது தங்கை கர்ப்பமாக உள்ளார். அவர் என் கனவில் வந்தால் என்ன பலன்?

🌟 உங்கள் தங்கையை கனவில் கண்டால் கூடிய விரைவில் சுபச் செயல்கள் நடைபெறும் என்பதைக் குறிக்கின்றது.

4. கொய்யாப்பழம் பறித்து வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கொய்யாப்பழம் பறித்து வருவது போல் கனவு கண்டால் செய்தொழிலில் செய்யும் புதிய முயற்சிகளால் எண்ணிய இலாபம் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. அடிக்கடி நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அடிக்கடி நாய் கடிப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. பெரு வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பெரு வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.


Share this valuable content with your friends