No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஐயப்பனுக்கு விரதம் இருப்பதால் கிடைப்பது என்னென்ன?

Dec 07, 2018   Ananthi   511    ஆன்மிகம் 

🌟 கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சிறப்பு வாய்ந்த புண்ணியத் தலம் என்றால் அது சபரிமலை தான். மஹிஷி என்ற அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் இங்கு தியானம் செய்ததாக ஐதீகம். கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் நேர்மை, ஒழுக்கம் போன்ற பாதையில் செல்ல வலியுறுத்தும் விரதமாக ஐயப்ப வழிபாடு இருப்பதும், சபரிமலை தரிசனத்தைத் தேர்வு செய்ய ஒரு காரணமாக உள்ளது.

🌟 கார்த்திகை மாதம் வந்தாலே ஐயப்ப பக்தர்களுக்கு கொண்டாட்டம்தான். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் குளிர்ந்த நீரில் குளித்து, உடல்சுத்தம், மன சுத்தத்துடன் அந்த ஐயப்பனின் அருளை வேண்டி காடு மேடு கடந்து சென்று சரணம் அடைவதில் உள்ள சுகத்தை, அதை அனுபவித்தவர்கள் மட்டுமே அறியமுடியும்.

🌟 இந்து மதத்தில் எண்ணிலடங்கா இறைவழிபாடுகள் இருந்தாலும், மண்ணில் மனிதனாகப் பிறந்து, இறைநிலையை அடைந்தவரான ஐயப்பனின் வழிபாடு அனைவரையும் கவரும் ஒன்றாக இருக்கிறது.

🌟 தான்தோன்றித் தனமாக ஊரைச் சுற்றிவருபவர்களை, ஒரு கால்கட்டு போட்டால் சரியாகிவிடுவான் என்று சொல்லக் கேட்டிருப்போம். அந்த கால்கட்டுக்கு திருமணம் செய்து வைத்தல் என்பது பொதுவான பொருளாக இருக்கிறது. ஆனால் கால்கட்டு என்பதற்கு பாதை மாறாது மனதை ஒருநிலைப்படுத்தி வாழ்வது என்பதே சரியான பொருளாகும்.

🌟 சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பன், குத்து காலிட்டு, கால்கள் கட்டப்பட்ட நிலையில்தான் காட்சி தருகிறார். அவர் தன்னுடைய தவத்தை யாரும் கலைத்து விடக்கூடாது என்பதற்காக மனதை ஒரு நிலைப்படுத்தியபடி அமர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

🌟 ஐயப்பனின் இந்த விரத தரிசனம், எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் தங்கள் இலக்குகளை மனிதர்கள் விட்டுவிடக்கூடாது என்பதை வலியுறுத்துவதாக கூறுகிறார்கள்.

🌟 ஐயப்பன் வழிபாடு ஏராளமான வாழ்வியல் தத்துவங்களை உள்ளடக்கி உள்ளது. நிலையற்ற இந்த பூலோக வாழ்க்கையில், வாழும் காலத்திலேயே நல்லவராக வாழ்ந்து, பிறவிப் பெருங்கடலை கடக்கும் எளிய வழியை காட்டுகிறது ஐயப்பன் வாழும் சபரிமலையின் வரலாறு.

🌟 ஆடம்பர வாழ்வு நிலையற்றது என்று உணர்த்தவே ஐயப்ப பக்தர்கள் எளிமையான ஆடையை, சீருடைபோல் அணிந்து செல்கிறார்கள். மேலும் அனைவரும் சமத்துவமானவர்கள் என்பதற்காகவே ஒரே மாதிரியாக இருமுடி கட்டி மலையேறுகின்றனர். எனவே ஐயப்ப விரதம் பக்தர்களுக்கு பொன், பொருள் தருவதோடு மட்டுமல்லாமல் ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்கிறது.

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!


Share this valuable content with your friends


Tags

முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம் வண்டியச்சு April 1 கணபதிக்கு பூஜை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? விருச்சக ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் தாலிக்கயிறு sanipeyarchipalangal2020 இந்த இடத்தில் குரு இருந்தால்... அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும்...!! விபூதி இடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? Today rasipalan in pdf format - 28.07.2018 கம்மல் Name secret of vaasthu வளைகாப்பு செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? கிழக்கு பகுதியின் கட்டிட அமைப்புகள் ராசமாபுரத்திற்கு சென்ற சீவகன் மயில் தோகை விரித்து ஆடுவது போல் கனவு ஏப்ரல் மாத ராசிபலன்கள் pdf வடிவில் சாய்பாபா சிலையை பூஜையறையில் வைத்து வழிபடலாமா? கலீலியோ கலிலி