No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஐயப்பனைப் பற்றிய அரிய தகவல்கள் உங்களுக்காக !!

Dec 01, 2018   Ananthi   366    ஆன்மிகம் 

🌟 சபரிமலை ஐயப்பனிற்கு 48 நாள் விரதம் இருப்பதால் நல்ல பழக்கங்கள் ஏற்பட்டு பலரது வாழ்க்கை முறையே மாறியுள்ளது. இதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனை தேடி செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படியே உள்ளது.

🌟 சபரிமலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள் 48 மைல் கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பது தான் மரபு.

🌟 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா என்றால் நம் பாவங்களை அழித்து ஞானத்தைப் பெற ஐயப்பனை சரண் அடைகிறோம் என்று பொருள்.

🌟 கன்னிபூஜை நடத்தி விருந்து கொடுக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. உளமார்ந்த பக்தி ஒன்றையே ஐயப்பன் விரும்புகிறார்.

🌟 சபரிமலை ஐயப்பன் கோவில் சுயம்புலிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது.

🌟 சபரிமலையை அடைந்ததும் சரணம் கூறியபடி செல்ல வேண்டும். உங்கள் கழுத்தில் உள்ள மாலை நெஞ்சில் அடிபடும் போதெல்லாம் ஐயப்பன் உங்கள் மனசாட்சியை தட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.

🌟 மகிஷியை வதம் செய்த மணிகண்டன், அவள் உடல் வளர்ந்து பூமிக்கு மேல் வரக்கூடாது என்பதற்காக கனமான கல்லை வைத்ததாக வரலாறு கூறுகிறது. இதை நினைவு கூறும் வகையில் அழுகையில் எடுத்த கற்களை கல்லிடும் குன்று பகுதியில் பக்தர்கள் போடுகிறார்கள்.

🌟 நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று அகந்தைகளையும் விரட்டவே சபரிமலை பதினெட்டாம் படியில் மூன்று கண்களை உடைய தேங்காயை உடைக்கிறார்கள்.

🌟 பதினெட்டாம் படியில் ஏறும் போது பக்தர்கள் தங்கள் கோரிக்கையை அய்யப்பனிடம் வைக்க வேண்டும் என்பது ஐதீகமாகும். படியில் ஏறும் போது, நெரிசல் ஏற்படும் பட்சத்தில் உங்கள் கவனம் சிதறி விடக்கூடாது. எனவே பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறும் போது, என்னதான் நெரிசல் ஏற்பட்டாலும் உங்கள் வேண்டுதலை விட்டு விடாதீர்கள்.

🌟 சபரிமலை அய்யப்பன் கோவிலில் தத்துவமசி எனும் தத்துவம் எழுதப்பட்டுள்ளது. தத்துவமசி என்றால், நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாக உள்ளாய் என்று பொருள்.

🌟 சபரிமலை சென்று வந்தவர்கள் ஐயப்பனின் அருள் பிரசாதத்தை பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும், உறவினர்களுக்கும் முறைப்படி கொடுத்தால்தான் யாத்திரை பூரணத்துவம் பெறும் என்பது ஐதீகம்.


Share this valuable content with your friends


Tags

மே 26 கோவிலில் பிரசாதம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? akaththik kiirai புதிய நகையை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? narasaimmi saneethi மிதுன லக்னத்திற்கு 8ல் குரு நீசம் பெற்றிரந்தால் என்ன பலன்? அக்டோபர் 17 . தெரியாத ஒருவர் எனக்கு முத்தம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருமணத்திற்கு எந்தெந்த பொருத்தங்கள் முக்கியமாக இருக்க வேண்டும்? roogini மே 27 கொய்யாப்பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கோவில் புதுவிதமான சிந்தனை... நீண்ட ஆயுள்... யார் யாருக்கு? ரிஷப லக்னத்திற்கு 5-ல் ராகு இருந்தால் என்ன பலன்? தொழில் செய்யும் இடம் எப்படி இருக்க வேண்டும்? green saree 2023 Makara rāci palaṉkaḷ.! வீட்டை சுத்தம் செய்யும்போது உப்பை பயன்படுத்தி சுத்தம் செய்யலாமா?