வீடு கட்ட வாங்கிய கடனை, வாழ்நாள் முழுவதும் மாத தவணையாக கட்டுவதற்கான காரணம் என்ன?
1. இன்றைய நாளில் கவர்ச்சிகரமான விளம்பரங்களால் அதிகப்படியான வீடுகள் விற்கப்படுகின்றன.
2. நமது ஊரில் உள்ள 80 சதவீத மக்கள் மாத தவணைத் திட்டத்தின் கீழ் வீட்டை வாங்குகிறார்கள் அல்லது கட்டுகிறார்கள்.
3. தன்னை சுற்றி உள்ள சமுதாயத்தின் கௌரவத்திற்காக சில தரப்பு மக்கள் வீட்டைக் கடனுக்காக மாதத் தவணையில் வாங்குகிறார்கள்.
4. சிலபேர் தன்னுடைய வாழ்நாளில் சொந்த வீடு வேண்டும் என்கிற லட்சியத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் மாதத் தவணையில் வீட்டை வாங்குகிறார்கள்.
இப்படி மேற்கூறிய பல காரணங்களால் ஒருவர் சொந்த வீடு வாங்க முயல்கிறார். அப்படி வாங்கக்கூடிய வீடுகள் வாஸ்து சாஸ்திரத்தில் விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்று கேட்டால் கண்டிப்பாக அவர்களுக்கு தெரிவதில்லை, காரணம் தன்னுடைய லட்சியம் நிறைவேறினால் போதும் என்கிற மனநிலையே.
வாஸ்து படி தவறான அமைப்புகள் :
🌟 அடிப்படை விதிகளை மீறிய கட்டிட அமைப்பு.
🌟 வடக்கு மற்றும் கிழக்கு பொது சுவராக ஒரு வீட்டை உருவாக்கிக் கொள்வது.
🌟 தெற்கு திசை பார்த்த அல்லது மேற்கு திசை பார்த்த வீடுகளாக இருப்பது.
🌟 வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் போர்டிகோ, உள் மூளை படி அமைப்பு, கழிவுநீர் தொட்டி, கழிவறைகள், பூஜை அறைகள் போன்றவை வருவது.
மேற்கூறிய தவறான அமைப்புகள் வந்துவிட்டால் அந்த வீடு, வாழ்நாள் முழுவதும் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு மாதத் தவணைத் திட்டத்தை ஏதோ ஒரு வகையில் ஊக்குவித்துக் கொண்டே இருக்கும்.