🏠 கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்றார் ஒரு புலவர். ஒரு அரசனின் மனநிலையே கலங்கும் அளவிற்கு கடன்பட்டவரின் மனவேதனை இருக்கும் என்பதை இங்கு அந்த புலவர் உவமையாக ஒப்பிட்டுள்ளார்.
🏠 ஒருவர் கடன் சுமைக்கு ஆளாவதற்கும் அவருடைய வீட்டு வாஸ்து சாஸ்த்திரதிற்கும்; ஏதேனும் தொடர்புண்டா என்பதைப் பார்ப்போம்.
🏠 நம் நண்பர்கள் பல பேர் தங்களுடைய வாழ்நாளில் பல அனுபவங்களை சொல்ல நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது நான் இந்த இடத்திற்கு அலுவலகத்தை மாற்றிய பிறகுதான் கடன் வந்தது, அந்த வீட்டிற்கு வந்த பிறகுதான் என் வாழ்க்கையை தலைகீழாக மாறியது, நான் இடத்தை வாங்கிய பிறகுதான் கடன் வந்தது, நான் இந்த கட்டிடத்தை கட்ட ஆரம்பித்த பிறகுதான் எனக்கு கடன் வந்தது என பல பேர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.
என்னென்ன அமைப்புகள் இருந்தால் கடன் வரும்?
1. தென்மேற்கு மாஸ்டர் பெட்ரூம் தவிர மற்ற அமைப்புகள் வருவது.
2. வடக்கு முழுவதும் மூடிய அமைப்பு, வடக்கு மற்றொருவருடைய கட்டிடத்தில் சேர்ந்த அமைப்பு.
3. தெற்கு காலி இடம் அதிகமாகவும், வடக்கு காலி இடம் மிக மிக குறைவானதாகவும் உள்ள அமைப்பு.
4. தென்மேற்கு பகுதியில் ஆறு, ஓடை, குளம், குட்டை, கிணறு, ஆழ்துளைக் கிணறு, மலக்குழி போன்ற பள்ளமான அமைப்புகள்.
5. தென்மேற்கு தெருக்குத்து, தெருப்பார்வை போன்ற அமைப்புகள்.
6. வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் ரோடு உயரமாகுதல்.
7. வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மேம்பாலம் வந்துவிடுதல்.
8. நம்முடைய இடத்திற்கு தெற்கும் மற்றும் மேற்கும் உள்ள இடத்தை விலைக்கு வாங்குதல்.
9. தென்மேற்கு தலைவாசல் அமைப்புகள் வருதல்.
10. வடமேற்கு பகுதியில் பள்ளமான அமைப்புகளை கிணறு, ஆழ்துளைக்கிணறு, தரைக்குகீழ் தண்ணீர் தொட்டி போன்றவைகள் வருதல்.
11. வடமேற்கு வளர்ந்த கட்டிட அமைப்புகள்.
🏠 இதுபோல் இன்னும் பல அமைப்புகள் இருக்கின்றன. நான் எனது அனுபவத்தில் கடன்பட்டவர்கள் வீட்டை ஆராய்ந்ததில் இங்கு குறிப்பிட்ட அமைப்பை தவிர வேறு அமைப்பில் யாவரும் இல்லை என்பதே உண்மை.
🏠 கொடுக்கல் வாங்கலில் நாணயம் இழந்த நபர்கள் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்தவர்களின் வீட்டு அமைப்பும் மேலே குறிப்பிட்ட சில அமைப்புகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்று அமைந்திருக்கும்.