1. முதலில் பிறக்கும் ஆணும், முதலில் பிறக்கும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாமா?
🌟 முதலில் பிறக்கும் ஆணும், முதலில் பிறக்கும் பெண்ணும் திருமணம் செய்வதை தவிர்த்தல் நல்லது.
2. 5-ம் அதிபதி சந்திரன், மூலம் நட்சத்திரத்தில் இருந்து தசா நடத்தினால் பலன் என்ன?
🌟 எண்ணங்களில் மாற்றம் உண்டாகும்.
🌟 புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.
🌟 பூர்வீக சொத்துக்களின் மூலம் சில விரயமும், அனுகூலமும் உண்டாகும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
3. துலாம் ராசியில், சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?
🌟 வாழ்க்கையில் உள்ள இன்பங்களை ரசித்து வாழக்கூடியவர்கள்.
🌟 அனைவரையும் வசீகரிக்கும் மற்றும் கம்பீரமான தோற்றத்தை உடையவர்கள்.
🌟 உடல் உழைப்பு அல்லாத கட்டளை மட்டும் இடும் பணிகளை விரும்பி செய்யக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
4. நான் மேஷ ராசி, ரிஷப லக்னம். 11-ல் சுக்கிரன் இருக்கிறது. இதற்கு என்ன பலன்?
🌟 உறவினர்களின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.
🌟 கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.
🌟 சமூக சேவைகளில் விருப்பம் கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
5. ஆறாம் வீட்டில் சூரியன், செவ்வாய் மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்?
🌟 பணியில் அடிக்கடி மாற்றம் உண்டாகும்.
🌟 வித்தியாசமான சிந்தனைகளை கொண்டவர்கள்.
🌟 எதிரிகளை வெல்லும் ஆற்றல் உடையவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
6. சனி திசை, குரு புத்தி நடந்தால் என்ன பலன்?
🌟 குரு வலிமையுடன் இருக்கும் பட்சத்தில் சுபச் செயல்கள் கைக்கூடும்.
🌟 செல்வாக்கு மேம்படும்.
🌟 ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் அலைச்சலும், முன்னேற்றமும் உண்டாகும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.