🌟 நாம் கடவுளுக்கு விரதம் இருப்பது நமது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காகத்தான். செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமானது. இவை அனைத்தும் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுமெனில் சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம்.
🌟 மற்ற விரதங்களை காட்டிலும் சனிக்கிழமை விரதத்திற்கென்று தனி மகத்துவம் உண்டு. ஒரு மாதத்தின் வளர்பிறையில் வரும் எந்தவொரு சுக்கிலபட்சத்தின் முதல் சனிக்கிழமையிலும் விரதத்தை தொடங்கலாம்.
🌟 இந்த விரதம் 11 வாரம் துவங்கி 51 வாரங்கள் வரை கடைபிடித்தால் நன்மையை தரும் என்பது நம்பிக்கை.
🌟 நவகிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று அழைக்கிறோம். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுட்காலம் அமையும்.
🌟 பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகரானவர் சனிபகவானே ஆவார்.
🌟சனிபகவான் யாருக்கும் எந்தவிதமான பாரபட்சமும் பார்க்க மாட்டார். பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.
சனிக்கிழமை விரதத்தின் பலன்கள் :
🌟 சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழமும், நீர் கலந்த பாணத்தை மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதத்தை முடிக்கலாம். மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.
🌟 சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைபிடிக்கலாம். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும்.
🌟 சனிபகவானானவர் ஆயுள் தரும் ஆயுள்காரகனாக இருக்கிறார். எனவே சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் சனீஸ்வரனின் அருள் பெற்று நீண்ட நாட்கள் வாழும் ஆயுளை பெறுகிறார்கள்.
🌟 இவ்விரதத்தை மேற்கொள்வதால் தொழில், வியாபாரங்களில் நிலையான வருமானமும் மேலும் தொழில் விருத்தியும் உண்டாகும்.
🌟 ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடிக்க ஆரோக்கியம், ஆயுள், செல்வம் பெருகி மகிழ்ச்சியான வாழ்வைப் பெறலாம்.
dam பாறையை உடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? செவ்வாய் புத்தி நடந்தால் என்ன பலன்? என்.எஸ் கிருஷ்ணன் ஆந்தை manakkanjsara nayanar சுக்கிரன் மற்றும் சந்திரன் இருந்தால் கருடனை கனவில் கண்டால் என்ன பலன்? மகர ராசியில் சனி இருந்தால் என்ன பலன்? அசுரர்களை காணச் செல்லுதல் வெள்ளை நாய் 25.10.2019 Rasipalan in pdf format!! tortoilse சதுர்த்தி திதியில் பிறந்தால் என்ன பலன்? dhiansari rasipalan பாம்பு சீறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? kanavu பணம் கட்டுக்கட்டாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 8ல் கேதுவும் யானை நிற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?