No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தேய்பிறை அஷ்டமி… கஷ்டங்கள் தீர பைரவர் வழிபாடு…!!

Mar 14, 2023   Ramya   182    ஆன்மிகம் 


தேய்பிறை அஷ்டமியும்... பஞ்சதீப விளக்கு வழிபாடும்...!!


💥 அஷ்டமி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது யார் என்றால் காலபைரவர் ஆவார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் என்றும், அடியார்கள் செய்த பாவங்களை நீக்குபவர் என்றும் பொருள் ஆகும்.

💥 சிவபெருமானுடைய 64 வடிவங்களில் ஒருவராக விளங்கும் பைரவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து வேலைகளையும் செய்கிறார்.

💥 எனவே இவருக்கு ஐந்து தீபங்கள் வைத்து விளக்கேற்றி வழிபடும் பொழுது, காலத்தால் தீர்க்க முடியாத எத்தகைய பிரச்சனையையும் அவர் தீர்த்து வைப்பார் என்பது நம்பிக்கை.

💥 அவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்வது எப்படி? என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க...

பைரவர் வழிபாடு :

💥 பைரவருக்கு மிகவும் உகந்த தினம் தேய்பிறை அஷ்டமி ஆகும். பௌர்ணமிக்கு பிறகு வரும் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டால் அவருடைய அருளை முழுமையாகப் பெறலாம். கோவிலுக்கு சென்று பைரவரை தரிசிக்க முடியாவிட்டாலும் வீட்டிலிருந்தே பைரவரை வழிபடலாம்.

💥 அஷ்டமி திதியில் வீட்டிலேயே தீபம் ஏற்றி மனதில் பைரவரை நினைத்து, பைரவர் மந்திரத்தை உச்சரித்து வழிபட மேன்மை உண்டாகும்.

பஞ்சதீப விளக்கு :

💥 காலபைரவர் பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆள்வதால் இவருக்கு கோவிலில் பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி, பஞ்ச விளக்குகளை ஏற்ற வேண்டும்.

💥 அதாவது 5 அகல் விளக்குகளை எடுத்து கொள்ளுங்கள். அதில் ஒவ்வொரு விளக்கிலும் ஒவ்வொரு வகையான எண்ணெய் ஊற்றி தனித்தனியே தீபத்தை ஏற்ற வேண்டும்.

💥 நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்கள் தான் பஞ்ச தீப எண்ணெய்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

💥 ஒவ்வொரு விளக்கிலும் இந்த ஒவ்வொரு எண்ணெய்களை ஊற்றி, பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்றி, பைரவருடைய மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் எல்லா விதமான பிரச்சனைகளும் தீரும்.

💥 இந்த நாளில் பைரவாஷ்டகம் வாசிப்பது உள்ளத்திலும், எண்ணத்திலும் நல்ல விஷயங்களை விதைக்கும். மேலும் நேர்மறை எண்ணங்கள் பெருகி குடும்பத்தில் இருக்கும் துஷ்ட சக்திகள் அத்தனையும் நீங்க செய்து எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று சுபிட்சம் அடைய செய்யும்.

பலன்கள் :

🌼 நினைத்த காரியங்கள் ஈடேறும்.

🌼 பணம் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.

🌼 குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும்.

🌼 சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.


Share this valuable content with your friends