No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சனிக்கிழமை… அனுமனை வணங்கினால் கிடைக்கும் அற்புத பலன்கள்..!!

Mar 10, 2023   Ramya   410    ஆன்மிகம் 


சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் வழிபாடு...!!


🌸 ராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர் ஆஞ்சநேயர். இவர் அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் ஆவார். அவர் பிறந்த தினமே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இவர் வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தார்.

🌸 இவரை எல்லா நாட்களிலும் வழிபடலாம். புதன், வியாழன் மற்றும் சனி ஆகிய மூன்று கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவதால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும். ஆஞ்சநேயரை பல விதமான முறைகளில் வழிபாடு செய்வதால் நினைத்தது நினைத்த நேரத்தில் நடைபெறும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாகும். அந்த வகையில் ஆஞ்சநேயரை எவ்வாறு வழிபடலாம்? என இங்கு தெரிந்து கொள்வோம்.

ஆஞ்சநேயர் வழிபாடு :

🌸 ராமர் பெயரை மனதில் சொல்லி வணங்குவதே ராமநாத வழிபாடு ஆகும். இந்த முறையில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது மிக நல்ல பலன்களை தரும்.

🌸 அனுமனுக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபட்டால் சாற்றிய வெண்ணெய் உருகுவதற்குள் கஷ்டங்கள் நீங்கி நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.

🌸 துளசி மாலையும், வெற்றிலை சுருள் மாலையும் ஆஞ்சநேயருக்கு விசேஷமானவை. எனவே சனிக்கிழமை வெற்றிலை மாலையை சாற்றி அனுமன் கவசம் படித்தால் சத்ரு பயம் நீங்கும், தடைபட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும்.

🌸 திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழக்கிழமை அன்று வெற்றிலை மாலை சாற்றலாம்.

🌸 அனுமனுக்கு திராட்சைப்பழம் பிரியமான நிவேதனப் பொருள் ஆகும். வெற்றி கிடைத்திட இவருக்கு திராட்சைப்பழம் படைத்து வழிபட வேண்டும்.

🌸 அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலையோடு ஸ்ரீராமஜெயம் எழுதிய காகித மாலையும் அணிவிக்க அனுமனின் அருள் பெறலாம்.

🌸 அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டால் சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

🌸 துவங்கிய வேலைகளில் தடை நீங்க வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடை மாலை சாற்றி வழிபடலாம்.

🌸 விருப்பங்கள் நிறைவேற கீழ்கண்ட ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரத்தைத் தினமும் 108 தடவை சொல்லி வரலாம்.

ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்:

"ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே

வாயுபுத்ராய தீமஹி

தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்"


Share this valuable content with your friends


Tags

குழந்தை பாக்கியம் ஆவணி மாதம் நிலம் வாங்கி daily horoscope 31.01.2020 in pdf format பங்குனி மாதத்தில் வேண்டுதல்களை நிறைவேற்றலாமா? தானியங்கள் நன்றாக விளைந்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இறந்து போன என்னுடைய தாயை கனவில் 20.11.2022 history in pdf fomat 18.11.2020 Rasipalan in PDF Format!! வீட்டில் High ceiling வரலாமா? கடக ராசியில் இப்பொழுது புதன் forest kiragappiraveesam தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழ யாரை வழிபட வேண்டும்? பாம்பை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பெரிய மரத்தினை கனவில் கண்டால் என்ன பலன்? வேப்பமரம் தீப்பற்றி எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன் (11.02.2022) - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புத்துணர்ச்சியான நாள் ? நண்பனுக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 10ம் இடத்தில் சனி 2 வயது