🌹 வெள்ளிக்கிழமை விரதம் அம்பிகை, முருகன் ஆகியோருக்கு உரியது. இந்த விரதத்தை மேற்கொண்டால் கணவன், மனைவி ஒற்றுமை நிலைக்கும். சுகபோக வாழ்வு உண்டாகும். வாகனயோகம் அமையும்.
🌹 வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றி பூஜைகள் செய்து இறைவனை வழிபட்டால் நன்மை உண்டாகும். அத்துடன், இந்த நாட்களில் ஆலயங்களிலும் சிறப்பான பூஜைகள் நடத்தப்படுவது வழக்கமாகும்.
🌹 15 வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரை பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு மற்றும் குடும்ப ஒற்றுமை உண்டாகும்.
🌹 மாசி வெள்ளியில் மாரியம்மன் முதலான அம்மனைத் தரிசனம் செய்து வேண்டினால் நன்மை உண்டாகும். மங்காத செல்வங்கள் தந்து காத்தருள்வாள் தேவி என்பது ஐதீகம்! குறிப்பாக, ராகு கால வேளையில் எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால் காரியத்தடைகள் நீங்கும்.
🌹 அதேபோல மாசி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை முன்னோர்கள் வழிபாடு செய்வது தொழில் தடை, வருமான தடை, வியாபார தடை, குல விருத்தியில் தடை, சுபகாரிய தடைகள் போன்ற எந்த வகையான தடைகளையும் தகர்த்து எறியும் வல்லமை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
🌹 மாசி மாத வெள்ளிக்கிழமையில் முன்னோர்கள் படத்திற்கு மாலை சாற்றி அவர்களுக்கு உரிய நைவேத்தியங்கள் படைத்து வழிபாடு செய்ய வாழ்வில் சகல யோகங்களையும் பெற்று தரும்.
🌹 செவ்வாயும், வெள்ளியும் அம்பிகைக்கு உகந்த அற்புதமான நாட்கள். செவ்வாய்க்கிழமையில், ராகு கால வேளையான மாலை 3 முதல் 4.30 மணிக்குள், துர்க்கைக்கு தீபமேற்றி வழிபடலாம்.
🌹 அதேபோல், வெள்ளிக்கிழமை ராகு கால வேளையான காலை 10.30 முதல் 12 மணிக்குள், துர்க்கையை வணங்கி எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவதும், நவகிரக சன்னிதிக்கு சென்று ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்வதும் மிகுந்த பலனைத் தந்தருளும் என்பார்கள்.
🌹 மங்கள மாதமான மாசி மாதத்தில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு உரிய நாள்தான். அப்போது, அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசிப்பதும், தீபமேற்றி வழிபடுவதும் மங்காத செல்வத்தைத் தந்தருளும்.
மின்னலுடன் மழை பெய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? விரைவில் கடனை அடைக்க என்ன செய்வது? 09.09.2019 Rasipalan in pdf foramt!! காந்தருவதத்தை எந்தெந்த ராசிக்காரர்களுக்குகாலதாமதம் உண்டாகும்? புத்தாண்டு ராசிபலன்கள் Village daily rasipalan 24.03.2020 in pdf format பிரச்சனைகள் தீரும் லக்னத்திற்கு 6-ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்? குரு தனித்து இருந்தால் ஏற்படும் பலன்கள் ashvani உலக புவி தினம் பால் திரிந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? குதிரை துரத்துவது போல் கனவு கண்டால் அனுகூலம் உண்டாகும் Father ஆகஸ்ட் 06 மண் தீபம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? விருச்சிக ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?