No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மாசி மாத வெள்ளிக்கிழமைக்கு அப்படியென்ன சிறப்பு?

Feb 27, 2023   Ramya   186    ஆன்மிகம் 


மாசி வெள்ளிக்கிழமை வழிபாடு..!


🌹 வெள்ளிக்கிழமை விரதம் அம்பிகை, முருகன் ஆகியோருக்கு உரியது. இந்த விரதத்தை மேற்கொண்டால் கணவன், மனைவி ஒற்றுமை நிலைக்கும். சுகபோக வாழ்வு உண்டாகும். வாகனயோகம் அமையும்.

🌹 வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றி பூஜைகள் செய்து இறைவனை வழிபட்டால் நன்மை உண்டாகும். அத்துடன், இந்த நாட்களில் ஆலயங்களிலும் சிறப்பான பூஜைகள் நடத்தப்படுவது வழக்கமாகும்.

🌹 15 வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரை பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு மற்றும் குடும்ப ஒற்றுமை உண்டாகும்.

🌹 மாசி வெள்ளியில் மாரியம்மன் முதலான அம்மனைத் தரிசனம் செய்து வேண்டினால் நன்மை உண்டாகும். மங்காத செல்வங்கள் தந்து காத்தருள்வாள் தேவி என்பது ஐதீகம்! குறிப்பாக, ராகு கால வேளையில் எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால் காரியத்தடைகள் நீங்கும்.

🌹 அதேபோல மாசி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை முன்னோர்கள் வழிபாடு செய்வது தொழில் தடை, வருமான தடை, வியாபார தடை, குல விருத்தியில் தடை, சுபகாரிய தடைகள் போன்ற எந்த வகையான தடைகளையும் தகர்த்து எறியும் வல்லமை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

🌹 மாசி மாத வெள்ளிக்கிழமையில் முன்னோர்கள் படத்திற்கு மாலை சாற்றி அவர்களுக்கு உரிய நைவேத்தியங்கள் படைத்து வழிபாடு செய்ய வாழ்வில் சகல யோகங்களையும் பெற்று தரும்.

🌹 செவ்வாயும், வெள்ளியும் அம்பிகைக்கு உகந்த அற்புதமான நாட்கள். செவ்வாய்க்கிழமையில், ராகு கால வேளையான மாலை 3 முதல் 4.30 மணிக்குள், துர்க்கைக்கு தீபமேற்றி வழிபடலாம்.

🌹 அதேபோல், வெள்ளிக்கிழமை ராகு கால வேளையான காலை 10.30 முதல் 12 மணிக்குள், துர்க்கையை வணங்கி எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவதும், நவகிரக சன்னிதிக்கு சென்று ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்வதும் மிகுந்த பலனைத் தந்தருளும் என்பார்கள்.

🌹 மங்கள மாதமான மாசி மாதத்தில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு உரிய நாள்தான். அப்போது, அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசிப்பதும், தீபமேற்றி வழிபடுவதும் மங்காத செல்வத்தைத் தந்தருளும்.

🙏இந்த மாசி வெள்ளியில், மாரியம்மன் முதலான தேவியரை வணங்குவோம்... மகத்தான வாழ்வை அடைவோம்...!!🙏


Share this valuable content with your friends